திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருட் பதிகம்
tiruvaruṭ patikam
பிரார்த்தனைப் பதிகம்
pirārttaṉaip patikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

072. பிரசாதப் பதிகம்
pirasātap patikam

    புள்ளிருக்குவேளூர்
    கலிவிருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. சரதத் தால்அன்பர் சார்ந்திடும் நின்திரு
    விரதத் தால்அன்றி வேறொன்றில் தீருமோ
    பரதத் தாண்டவ னேபரி திப்புரி
    வரதத் தாண்டவ னேஇவ்வ ருத்தமே.
  • 2. வேத னேனும்வி லக்குதற் பாலனோ
    தீத னேன்துயர் தீர்க்கும்வ யித்திய
    நாத னேஉன்றன் நல்லருள் இல்லையேல்
    நோதல் நேரும்வன் நோயில்சி றிதுமே.
  • 3. அருந்தி னால்அன்ப கங்குளிர் ஆனந்த
    விருந்தி னால்மகிழ் வித்தருள் அண்ணலே
    வருந்தி நாடவ ரும்பிணி நின்அருள்
    மருந்தி னால்அன்றி மற்றொன்றில் தீருமோ.
  • 4. மாலும் நான்குவ தனனும் மாமறை
    நாலும் நாடரு நம்பர னேஎவ
    ராலும் நீக்கஅ ரிதிவ்வ ருத்தம்நின்
    ஏலும் நல்லருள் இன்றெனில் சற்றுமே.
  • 5. தேவர் ஆயினும் தேவர்வ ணங்கும்ஓர்
    மூவர் ஆயினும் முக்கண நின்அருள்
    மேவு றாதுவி லக்கிடற் பாலரோ
    ஓவு றாதஉ டற்பிணி தன்னையே.
  • 6. வைய நாயக வானவர் நாயக
    தையல் நாயகி சார்ந்திடும் நாயக
    உய்ய நின்னருள் ஒன்றுவ தில்லையேல்
    வெய்ய நோய்கள்வி லகுவ தில்லையே.
  • 7. கல்லை வில்லில்க ணித்தருள் செய்ததோர்
    எல்லை இன்றிஎ ழும்இன்ப வெள்ளமே
    இல்லை இல்லைநின் இன்னருள் இல்லையேல்
    தொல்லை நோயின்தொ டக்கது நீங்கலே.
  • 8. நீதி மாதவர் நெஞ்சிடை நின்றொளிர்
    சோதி யேமுத்தொ ழிலுடை மூவர்க்கும்
    ஆதி யேநின்அ ருள் ஒன்றும் இல்லையேல்
    வாதி யாநிற்கும் வன்பிணி யாவுமே.
  • 9. பத்தர் நித்தம்ப யில்பரி திப்புரி
    உத்த மப்பொரு ளேஉன்அ ருள்தனைப்
    பெத்தம் அற்றிடப் பெற்றவர்க் கல்லது
    நித்தம் உற்றநெ டும்பிணி நீங்குமோ.
  • 10. சைவ சிற்குணர் தம்முளம் மன்னிய
    தெய்வ தற்பர னேசிவ னேஇங்கு
    உய்வ தற்குன்அ ருள்ஒன்றும் இல்லையேல்
    நைவ தற்குந ணுகுவ நோய்களே.

பிரசாதப் பதிகம் // பிரசாதப் பதிகம்

No audios found!