திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
சிவபுண்ணியத் தேற்றம்
sivapuṇṇiyat tēṟṟam
அவலத் தழுங்கல்
avalat taḻuṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

008. முத்தி உபாயம்
mutti upāyam

    திருவொற்றியூர்
    வஞ்சித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஒற்றி ஊரனைப்
    பற்றி நெஞ்சமே
    நிற்றி நீஅருள்
    பெற்றி சேரவே.-
  • 2. சேர நெஞ்சமே
    தூரம் அன்றுகாண்
    வாரம் வைத்தியேல்
    சாரும் முத்தியே.
  • 3. முத்தி வேண்டுமேல்
    பத்தி வேண்டுமால்
    சத்தி யம்இது
    புத்தி நெஞ்சமே.
  • 4. நெஞ்ச மேஇது
    வஞ்ச மேஅல
    பிஞ்ச கன்பதம்
    தஞ்சம் என்பதே.
  • 5. என்ப தேற்றவன்
    அன்ப தேற்றுநீ
    வன்பு மாற்றுதி
    இன்பம் ஊற்றவே.-
  • 6. ஊற்றம் உற்றுவெண்
    நீற்றன் ஒற்றியூர்
    போற்ற நீங்குமால்
    ஆற்ற நோய்களே.-
  • 7. நோய்கள் கொண்டிடும்
    பேய்கள் பற்பலர்
    தூய்தன் ஒற்றியூர்க்
    கேய்தல் இல்லையே.
  • 8. இல்லை இல்லைகாண்
    ஒல்லை ஒற்றியூர்
    எல்லை சேரவே
    அல்லல் என்பதே.-
  • 9. அல்லல் என்பதேன்
    தொல்லை நெஞ்சமே
    மல்லல் ஒற்றியூர்
    எல்லை சென்றுமே.-
  • 10. சென்று வாழ்த்துதி
    நன்று நெஞ்சமே
    என்றும் நல்வளம்
    ஒன்றும் ஒற்றியே.-

முத்தி உபாயம் // முத்தி உபாயம்

No audios found!