திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆற்றாக் காதலின் இரங்கல்
āṟṟāk kātaliṉ iraṅkal
சோதிடம் நாடல்
sōtiṭam nāṭal
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

014. திருக்கோலச் சிறப்பு
tirukkōlach siṟappu

    தலைவி வியத்தல்
    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார்
    மன்னென் றுலகம் புகழ்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
    மின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து)
    இன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
  • 2. அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
    வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற வள்ளல் பவனி வரக்கண்டேன்
    துள்ளிக் குதித்தென் மனம்அவரைச் சூழ்ந்த தின்னும் வந்ததிலை
    எள்ளிக் கணியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
  • 3. அனத்துப் படிவம் கொண்டயனும் அளவா முடியார் வடியாத
    வனத்துச் சடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
    மனத்துக் கடங்கா தாகில்அதை வாய்கொண் டுரைக்க வசமாமோ
    இனத்துக் குவப்பாம் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
  • 4. கொழுதி அளிதேன் உழுதுண்ணும் கொன்றைச் சடையார் கூடலுடை
    வழுதி மருகர் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
    பழுதில் அவனாந் திருமாலும் படைக்குங் கமலப் பண்ணவனும்
    எழுதி முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
  • 5. புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார்
    மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
    உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற
    என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
  • 6. சொல்லுள் நிறைந்த பொருளானார் துய்யர் உளத்தே துன்னிநின்றார்
    மல்லல் வயற்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
    கல்லும் மரமும் ஆனந்தக் கண்­ர் கொண்டு கண்டதெனில்
    எல்லை யில்லா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
  • 7. நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்றுநறா
    ஆர்க்கும் பொழில்சூழ் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
    பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும்
    யார்க்கும் அடங்கா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
  • 8. கலக அமணக் கைதவரைக் கழுவி லேற்றுங் கழுமலத்தோன்
    வலகை குவித்துப் பாடும்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
    உலக நிகழ்வைக் காணேன்என் உள்ளம் ஒன்றே அறியுமடி
    இலகும் அவர்தந் திருஅழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
  • 9. கண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள்அருள்
    வண்ணம் உடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன்
    நண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி
    எண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.
  • 10. மாழை மணித்தோள் எட்டுடையார் மழுமான் ஏந்தும் மலர்க்கரத்தார்
    வாழை வளஞ்சூழ் ஒற்றியூர் வாணர் பவனி வரக்கண்டேன்
    யாழை மலைக்கும் மொழிமடவார் யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார்
    ஏழை யேன்நான் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே.

திருக்கோலச் சிறப்பு // திருக்கோலச் சிறப்பு

No audios found!