திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து
aruṇakiri viḷaṅka vaḷarnta sivakkoḻuntu
திருவோத்தூர் சிவஞானதேசிகன் திருச்சீர் அட்டகம்
tiruvōttūr sivañāṉatēsikaṉ tiruchsīr aṭṭakam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

071. திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்
tiruvōttūr sivañāṉa tēsikaṉ tōttiram

    நாற்பத்தெண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்
    ஒளிபெற விளங்குசுடரே
  • 2. உதயநிறை மதிஅமுத உணவுபெற நிலவுசிவ
    யோகநிலை அருளுமலையே
  • 3. உனதுசெயல் எனதுசெயல் உனதுடைமை எனதுடைமை
    உணர்என உணர்த்துநிறைவே
  • 4. உளஎனவும் இலஎனவும் உரைஉபய வசனம்அற
    ஒருமொழியை உதவுநிதியே
  • 5. ஒன்றுடன் இரண்டெனவி தண்டைஇடும் மிண்டரொடும்
    ஒன்றல்அற நின்றநிலையே
  • 6. உன்னல்அற உன்னுநிலை இன்னதென என்னுடைய
    உள்உணர உள்ளுமதியே
  • 7. உன்நிலையும் என்நிலையும் அன்னியம்இ லைச்சிறிதும்
    உற்றறிதி என்றபொருளே
  • 8. உண்மைநெறி அண்மைதனில் உண்டுளம்ஒ ருங்கில்என
    ஓதுமெய்ப் போதநெறியே
  • 9. அலகின்மறை மொழியும்ஒரு பொருளின்முடி பெனஎன
    தகந்தெளிய அருள்செய்தெருளே
  • 10. ஐம்பூதம் ஆதிநீ அல்லைஅத் தத்துவ
    அதீதஅறி வென்றஒன்றே
  • 11. அத்துவா ஆறையும் அகன்றநிலை யாதஃது
    அதீதநிலை என்றநன்றே
  • 12. ஆணைஎம தாணைஎமை அன்றிஒன் றில்லைநீ
    அறிதிஎன அருளுமுதலே
  • 13. அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
    அறிவித்த சுத்தஅறிவே
  • 14. அத்துவித நிலைதுவித நிலைநின்ற பின்னலது
    அடைந்திடா தென்றஇறையே
  • 15. ஆனந்த மதுசச்சி தானந்த மேஇஃது
    அறிந்தடைதி என்றநலமே
  • 16. அட்டசித் திகளும்நின தேவல்செயும் நீஅவை
    அவாவிஇடல் என்றமணியே
  • 17. இலகுபரி பூரண விலாசம்அல திலைஅண்டம்
    எங்கணும் எனச்சொல்பதியே
  • 18. இரவுபகல் அற்றஇடம்அதுசகல கேவலம்
    இரண்டின்நடு என்றபரமே
  • 19. இச்சைமன மாயையே கண்டன எலாம்அவை
    இருந்துகாண் என்றதவமே
  • 20. யான்பிறர் எனும்பேத நடைவிடுத் தென்னோடு
    இருத்திஎன உரைசெய்அரைசே
  • 21. என்களைக ணேஎனது கண்ணேஎன் இருகண்
    இலங்குமணி யேஎன்உயிரே
  • 22. என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
    இருந்தசிவ மேஎன் அன்பே
  • 23. என்தெய்வ மேஎனது தந்தையே எனைஈன்று
    எடுத்ததா யேஎன்உறவே
  • 24. என்செல்வ மேஎனது வாழ்வேஎன் இன்பமே
    என்அருட் குருவடிவமே
  • 25. கலகமனம் உடையஎன் பிழைபொறுத் தாட்கொண்ட
    கருணையங் கடல்அமுதமே
  • 26. காழிதனில் அன்றுசுரர் முனிவர்சித் தர்கள்யோகர்
    கருதுசம யாதிபர்களும்
  • 27. கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்
    களித்துமெய்ப் போதம்உண்டு
  • 28. கனிமதுரம் ஒழுகுசெம் பதிகச்செ ழும்சொன்மழை
    கண்ணுதல் பவளமலையில்
  • 29. கண்டுபொழி அருள்முகில் சம்பந்த வள்ளலாங்
    கடவுளே ஓத்தூரினில்
  • 30. கவினுற விளங்குநற் பணிகள்சிவ புண்ணியக்
    கதிஉல கறிந்துய்யவே
  • 31. கரைஅற்ற மகிழ்வினொடு செய்தருள் புரிந்திடும்
    காட்சியே சிவஞானியாம்
  • 32. கருதவரும் ஒருதிருப் பெயர்கொள்மணியேஎமைக்
    காப்பதுன் கடன்என்றுமே.

திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம் // திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்