திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அச்சத் திரங்கல்
achsat tiraṅkal
கருணை பெறா திரங்கல்
karuṇai peṟā tiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

069. புறமொழிக் கிரங்கல்
puṟamoḻik kiraṅkal

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. கேளனந் தான்ஒரு போதுண் டனைமனக் கேதம்அற
    நீளனம் தேடு முடியான் எதுநினக் கீந்ததென்றே
    வேளனம் போல்நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய்
    ஏளனம் செய்குவர் நீஅரு ளாவிடில் என்அப்பனே.
  • 2. அப்பாநின் பொன்னருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல்
    துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே
    இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ஙனமோ
    செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே.
  • 3. தீதுசெய் தேற்கருள் செய்வான்நின் சித்தம் திரும்பிலையேல்
    தாதுசெய் தேகத்து ணாஒரு போது தவிர்ந்தநினக்
    கேதுசெய் தான்சிவன் என்றே உலகர் இழிவுரைத்தால்
    யாதுசெய் வேன்தெய்வ மேஎளி யேன்உயிர்க் கின்னமுதே.
  • 4. தெரியாமை யால்சிறி யேன்செய்குற் றத்தைநின் சித்தமதில்
    பிரியாமை வைத்தருள் செய்திலை யேல்எனைப் பெற்றவளும்
    பெரியாசை கொண்டபிள் ளாய்அரன் என்தரப் பெற்றதென்றே
    பரியாசை செய்குவ ளால்அய லார்என் பகருவதே.
  • 5. எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி
    அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம்
    பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்
    கொண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே.
  • 6. பொய்யான வஞ்சக னேன்பிழை யாவும் பொறுத்துனருள்
    செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர்
    எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய்
    அய்யாஎன் இன்னமு தேஅர சேஎன தாண்டவனே.
  • 7. உன்உள்ளம் கொண்டேற் கருளாய் எனில்இவ் உலகர்பொய்யாம்
    என்உள்ளம் கொண்ட களவறி யாதுநின் றேடவிங்கே
    நின்உள்ளம் கொள்விர தப்பயன் யாது நிகழ்த்தெனவே
    முன்உள்ளம் கொண்டு மொழிவர்கண் டாய்எம் முதலவனே.
  • 8. முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங்
    கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர்
    வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன்
    றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே.
  • 9. ஆசும் படியில் அகங்கா ரமும்உடை யான்என்றெண்ணிப்
    பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர்
    ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக்
    கூசும் படிவரு மேஎன்செய் கேன்என் குலதெய்வமே.
  • 10. ஐதட் டிடும்நெஞ் சகத்தேன் பிழைகளை ஆய்ந்துவெறும்
    பொய்தட் டிகல்உடை யேற்குன் கருணை புரிந்திலையேல்
    வெய்தட்டி உண்ட விரதாநின் நோன்பு விருத்தம்என்றே
    கைதட்டி வெண்ணகை செய்வர்கண் டாய்அருட் கற்பகமே.

புறமொழிக் கிரங்கல் // புறமொழிக் கிரங்கல்

No audios found!