திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பிரார்த்தனைப் பதிகம்
pirārttaṉaip patikam
சிந்தைத் திருப்பதிகம்
sintait tiruppatikam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

074. திருப்புகற் பதிகம்
tiruppukaṟ patikam

    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. வேகமுறு நெஞ்ச மெலிவும் எளியேன்றன்
    தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல்
    மாக நதியும் மதியும் வளர்சடைஎம்
    ஏக இனிமற் றெனக்கார் இரங்குவரே.
  • 2. கள்ள மனத்துக் கடையோர்பால் நாணுறும்என்
    உள்ள மெலிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
    எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல்
    எள்ளும் உலகில் எனக்கார் இரங்குவரே.
  • 3. பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம்பெருமான்
    உன்னைமதித் துன்னுறும்என் உள்ளம் அறிந்திருந்தும்
    அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல்
    என்னை முகம்பார்த் தெனக்கார் இரங்குவரே.
  • 4. துன்னுடைய வியாக்கிரமத் தோலுடையான் தானிருக்கப்
    பொன்னுடையார் பக்கம் புகுவானேன் என்றிருப்பேன்
    தன்னுடைய துன்பம் தவிர்த்திங் கருளாயேல்
    என்னுடையாய் மற்றிங் கெனக்கார் இரங்குவரே.
  • 5. வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்
    தன்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்
    புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்
    என்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே.
  • 6. தோன்றுவதும் மாய்வதும்ஆம் சூழ்ச்சியிடைப் பட்டலைந்து
    மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே
    சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை
    ஏன்றுகொளாய் என்னில் எனக்கார் இரங்குவரே.
  • 7. தீதுமுற்றும் நாளும் செயினும் பொறுத்தருளும்
    சாதுமுற்றும் சூழ்ந்த தயாநிதிநீ என்றடைந்தேன்
    கோதுமுற்றும் தீரக் குறியாயேல் நன்மைஎன்ப
    தேதும்அற்ற பாவிக் கெவர்தான் இரங்குவரே.
  • 8. துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
    அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
    கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
    என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே.
  • 9. கோடாமே பன்றிதரும் குட்டிகட்குத் தாயாகி
    வாடா முலைகொடுத்த வள்ளல்என நான்அடுத்தேன்
    வாடாஎன் றுன்அருளில் வாழ்வான் அருளிலையேல்
    ஈடாரும் இல்லாய் எனக்கார் இரங்குவரே.
  • 10. கல்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
    நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
    அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
    எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே.

திருப்புகற் பதிகம் // திருப்புகற் பதிகம்