திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருக்குறிப்பு நாட்டம்
tirukkuṟippu nāṭṭam
பரம ராசியம்
parama rāsiyam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

091. தனித் திருப்புலம்பல்
taṉit tiruppulampal

    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திங்கள் விளங்கும் சடைத்தருவைத் தீம்பாற் சுவையைச் செந்தேனைச்
    செங்கை மருவும் செழுங்கனியைச் சீரார் முக்கட் செங்கரும்பை
    மங்கை மலையாள் மணந்தபெரு வாழ்வைப் பவள மலைதன்னை
    எங்கள் பெருமான் தனைஅந்தோ என்னே எண்ணா திருந்தேனே.
  • 2. அன்பர் இதய மலர்க்கோயில் அமர்ந்த பரமா னந்தத்தைத்
    துன்பம் அகலச் சுகமளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை
    வன்ப ரிடத்தின் மருவாத மணியை மணியார் மிடற்றானை
    இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணா திருந்தேனே.
  • 3. ஒருமைப் பயனை ஒருமைநெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப்
    பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை
    அருமைக் களத்தில் கருமைஅணி அம்மான் தன்னை எம்மானை
    இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணா திருந்தேனே.
  • 4. கறையோர் கண்டத் தணிந்தருளும் கருணா நிதியைக் கண்ணுதலை
    மறையோன் நெடுமாற் கரியசிவ மலையை அலையில் வாரிதியைப்
    பொறையோர் உள்ளம் புகுந்தொளிரும் புனித ஒளியைப் பூரணனாம்
    இறையோன் தன்னை அந்தோநான் என்னே எண்ணா திருந்தேனே.

தனித் திருப்புலம்பல் // தனித் திருப்புலம்பல்