திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
ஆன்ம விசாரத் தழுங்கல்
āṉma visārat taḻuṅkal
திருவருள் விழைதல்
tiruvaruḷ viḻaital
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

012. அவா அறுத்தல்
avā aṟuttal

    எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்கமுப் போதினும் தனித்தே
    சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் சிறியனேன் தவஞ்செய்வான் போலே
    ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே நவிலும்இந் நாய்வயிற் றினுக்கே
    காலையா தியமுப் போதினும் சோற்றுக் கடன்முடித் திருந்தனன் எந்தாய்.
  • 2. சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
    ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
    போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
    சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
  • 3. விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவிலா தூண்எலாம் மறுத்த
    கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் கருத்துவந் துண்ணுதற் கமையேன்
    நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
    பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.
  • 4. உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் றொருவனை உரைப்பதோர் வியப்போ
    குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
    கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்தபே ராசை
    வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.
  • 5. கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறுந்தண்
    நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன் உணவில்
    ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் அய்யகோ அடிச்சிறு நாயேன்
    பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.
  • 6. பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
    சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகுபலா மாமுதற் பழத்தின்
    தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
    வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
  • 7. உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பலகால்
    கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் கட்டிநல் தயிரிலே கலந்த
    தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன்
    திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.
  • 8. மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
    சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
    இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
    குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.
  • 9. தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் தவறவிட் டிடுவதற் கமையேன்
    கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
    வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப மலங்கொட்டஓடிய புலையேன்
    பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த பாவியேன் என்செய்வேன் எந்தாய்.
  • 10. வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டிவைத்தலே துவட்டலில்சுவைகள்
    உறுத்தலே முதலா உற்றபல் உணவை ஒருமல வயிற்றுப்பை உள்ளே
    துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் துணிந்தரைக்கணத்தும்வன் பசியைப்
    பொறுத்தலேஅறியேன் மலப்புலைக்கூட்டைப்பொறுத்தனன்என்செய்வேன்எந்தாய்.
  • 11. பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள்
    உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
    கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
    துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.
  • 12. அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
    தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன்
    பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
    முடிக்கடிபுனையமுயன்றிலேன் அறிவில்மூடனேன்என்செய்வேன்எந்தாய்.
  • 13. உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே
    அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே
    தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால்
    கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.

அவா அறுத்தல் // அவா அறுத்தல்

No audios found!