திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருள் ஆரமுதப் பேறு
aruḷ āramutap pēṟu
இறை இன்பக் குழைவு
iṟai iṉpak kuḻaivu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

055. உபதேச உண்மை
upatēsa uṇmai

    கலிவிருத்தம்
    பண்: நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. கண்ணே கண்மணி யே - கருத் - தேகருத் தின்கனி வே
    விண்ணே விண்ணிறை வே - சிவ - மேதனி மெய்ப்பொரு ளே
    தண்ணேர் ஒண்மதி யே - எனைத் - தந்த தயாநிதி யே
    உண்ணேர் உள்ளொளி யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
  • 2. வளியே வெண்ணெருப் பே - குளிர் - மாமதி யேகன லே
    வெளியே மெய்ப்பொரு ளே - பொருள் - மேவிய மேனிலை யே
    அளியே அற்புத மே - அமு - தேஅறி வேஅர சே
    ஒளியே உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
  • 3. அன்பே என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
    என்பே உள்ளுரு கக் - கலந் - தென்னு ளிருந்தவ னே
    இன்பே என்னறி வே - பர - மேசிவ மேயென வே
    உன்பே ரோதுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
  • 4. தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே
    அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே
    இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே
    உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
  • 5. துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே
    அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே
    இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே
    ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே.
  • 6. என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே
    நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே
    மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே
    ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
  • 7. திருவே தெள்ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே
    கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே
    மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம்
    உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
  • 8. தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே
    அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங்
    கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே
    உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
  • 9. பெண்ணாய் ஆணுரு வாய் - எனைப் - பெற்றபெ ருந்தகை யே
    அண்ணா என்னர சே - திரு - வம்பலத் தாடுகின் றோய்
    எண்ணா நாயடி யேன் - களித் - திட்டவு ணவையெ லாம்
    உண்ணா துண்டவ னே - எனக் - குண்மை உரைத்தரு ளே.
  • 10. நந்நா லுங்கடந் தே - ஒளிர் - ஞானச பாபதி யே
    பொன்னா ருஞ்சபை யாய் - அருட் - பூரண புண்ணிய னே
    என்னால் ஆவதொன் றும் - உனக் - கில்லையெ னினுமெந் தாய்
    உன்னால் வாழுகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே.

ஞானோபதேசம் // உபதேச உண்மை