திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
புண்ணியநீற்று மான்மியம்
puṇṇiyanīṟṟu māṉmiyam
எண்ணத் தேங்கல்
eṇṇat tēṅkal
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

033. உறுதி உணர்த்தல்
uṟuti uṇarttal

    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. மஞ்சேர் பிணிமடி யாதியை நோக்கி வருந்துறும்என்
    நெஞ்சே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
    எஞ்சேல் இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
    அஞ்சேல் இதுசத் தியம்ஆம்என் சொல்லை அறிந்துகொண்டே.
  • 2. அறியாத நம்பிணி ஆதியை நீக்கும் அருள்மருந்தின்
    நெறியாம் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
    எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
    குறியா திருக்கலை என்ஆணை என்றன் குணநெஞ்சமே.
  • 3. என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல்
    நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண்ணீறுண்டுநீ
    இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
    நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.

உறுதி உணர்த்தல் // உறுதி உணர்த்தல்