திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
வருவார் அழைத்துவாடி
varuvār aḻaittuvāṭi
ஆடிய பாதம்
āṭiya pātam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

124. பெரு வழக்கு
peru vaḻakku

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
    பல்லவி
  • 1. இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
    என்றும் தீரா வழக்குக் காண டி.
  • பல்லவி எடுப்பு
  • 2. எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம்
    இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார். இவர்க்கும்
  • கண்ணிகள்
  • 3. அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே
    யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை
    இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே
    இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே. இவர்க்கும்
  • 4. அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன்
    அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன்
    இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன்
    இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன். இவர்க்கும்
  • 5. சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு
    சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு
    என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு
    இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு. இவர்க்கும்
  • 6. இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது
    என்றும் தீரா வழக்குக் காண டி.

இவர்க்கும் எனக்கும் // பெரு வழக்கு