திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பரசிவ வணக்கம்
parasiva vaṇakkam
அருட்பெருஞ்சோதி அட்டகம்
aruṭperuñsōti aṭṭakam
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

002. அருட்பெருஞ்ஜோதி அகவல்
aruṭperuñjōti akaval

    நிலைமண்டில ஆசிரியப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
    அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
  • 2. அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
    அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
  • 3. ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
    ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 4. இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
    அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி
  • 5. ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
    ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 6. உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
    அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 7. ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
    ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 8. எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
    அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 9. ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
    ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி
  • 10. ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
    ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 11. ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
    யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 12. ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
    ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
  • 13. ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
    அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
  • 14. திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
    அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி
  • 15. சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
    அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 16. சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
    அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 17. தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
    ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
  • 18. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
    ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
    அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
  • 20. பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
    அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
  • 21. சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
    அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 22. சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
    அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 23. தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
    அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
  • 24. தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
    அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
  • 25. சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
    அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி
  • 26. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
    ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
  • 27. காரண காரியங் காட்டிடு வெளியெனும்
    ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 28. ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
    ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 29. வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
    ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 30. என்றா தியசுடர்க் கியனிலை யாயது
    வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 31. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
    அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 32. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
    அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 33. துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
    அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
  • 34. எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
    அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 35. இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
    அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 36. சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
    வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 37. சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
    அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 38. நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
    அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 39. உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
    அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
  • 40. சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
    ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 41. மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
    அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
  • 42. ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
    ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
  • 43. வாரமு மழியா வரமுந் தருந்திரு
    வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 44. இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
    அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 45. கற்பம் பலபல கழியினு மழிவுறா
    அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 46. எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
    வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 47. பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
    ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
  • 48. எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
    அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி
  • 49. தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
    அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
  • 50. எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
    அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி
  • 51. வாடுத னீக்கிய மணிமன் றிடையே
    ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி
  • 52. நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே
    ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி
  • 53. கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
    அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
  • 54. ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
    வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
  • 55. இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
    கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி
  • 56. எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா
    தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி
  • 57. பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்
    னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி
  • 58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா
    ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
  • 59. தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்
    அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி
  • 60. உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
    அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி
  • 61. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
    அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
  • 62. உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
    அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி
  • 63. என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
    தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி
  • 64. ஓதியோ தாம லுறவெனக் களித்த
    ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
  • 65. படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
    அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி
  • 66. பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
    அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
  • 67. திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
    அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி
  • 68. மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்
    அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
  • 69. எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
    அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
  • 70. வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
    அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி
  • 71. எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்
    அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
  • 72. தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
    றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 73. சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்
    தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 74. சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
    அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 75. முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
    ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 76. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
    அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி
  • 77. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
    ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
  • 78. இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
    றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 79. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
    அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
  • 80. நானந்த மில்லா நலம்பெற வெனக்கே
    ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 81. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
    யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 82. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
    வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
  • 83. எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
    அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 84. சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
    லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 85. எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்
    அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 86. சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
    அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
  • 87. சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
    அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
  • 88. உபரச வேதியி னுபயமும் பரமும்
    அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
  • 89. மந்தண மிதுவென மறுவிலா மதியால்
    அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
  • 90. எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய
    வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி
  • 91. செடியறுத் தேதிட தேகமும் போகமும்
    அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
  • 92. துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
    அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
  • 93. பொதுவது சிறப்பது புதியது பழயதென்
    றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
  • 94. சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
    யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 95. ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
    காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி
  • 96. எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்
    கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 97. எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
    கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 98. இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்
    கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
  • 99. பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்
    ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
  • 100. தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
    தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
  • 101. எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
    அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 102. வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
    ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
  • 103. சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
    ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 104. சத்திய மாஞ்சிவ சத்த்’யை யீந்தெனக்
    கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
  • 105. சாவா நிலையிது தந்தன முனக்கே
    ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி
  • 106. சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
    ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
  • 107. மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
    அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
  • 108. தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
    ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி
  • 109. காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
    ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி
  • 110. எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா
    றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
  • 111. எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
    அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
  • 112. கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
    ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
  • 113. எண்டர முடியா திலங்கிய பற்பல
    அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
  • 114. சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
    யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி
  • 115. வாழிநீ டூழி வாழியென் றோங்குபே
    ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி
  • 116. மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
    யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 117. எச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று
    அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி
  • 118. நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
    றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
  • 119. முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
    மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 120. மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
    ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 121. கருமசித் திகளின் கலைபல கோடியும்
    அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 122. யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
    ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 123. ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
    ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 124. புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
    அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 125. முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
    அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
  • 126. சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
    அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
  • 127. ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்
    ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
  • 128. இன்பசித் தியினிய லேக மனேகம்
    அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி
  • 129. எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
    அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 130. இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
    அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி
  • 131. படிமுடி கடந்தனை பாரிது பாரென
    அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
  • 132. ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
    மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 133. இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி
    யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 134. ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
    ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 135. நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
    அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 136. கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
    அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
  • 137. கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
    அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
  • 138. அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே
    அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
  • 139. பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே
    அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
  • 140. வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
    தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 141. ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
    ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 142. சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
    றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
  • 143. பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
    மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
  • 144. எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்
    அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
  • 145. மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
    ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 146. பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
    தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 147. சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
    அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
  • 148. வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்
    ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி
  • 149. எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
    யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி
  • 150. நவையிலா வுளத்தி னாடிய நாடிய
    வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 151. கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
    டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி
  • 152. நன்றறி வறியா நாயினேன் றனையும்
    அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி
  • 153. நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
    ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
  • 154. தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
    ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
  • 155. எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
    அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி
  • 156. ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
    டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி
  • 157. தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
    ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 158. மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
    யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
  • 159. உருவமு மருவமு முபயமு மாகிய
    அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
  • 160. இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
    அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி
  • 161. தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள
    அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
  • 162. பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய
    அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி
  • 163. உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
    அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
  • 164. வெருள்மன மாயை வினையிருணீக்கியுள்
    அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
  • 165. சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே
    அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி
  • 166. விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
    அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
  • 167. அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட
    அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி
  • 168. உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
    அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
  • 169. விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
    அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி
  • 170. விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
    அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 171. காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
    ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 172. காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
    ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 173. அனலினு ளனலா யனனடு வனலாய்
    அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 174. அனலுறு மனலா யனனிலை யனலாய்
    அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 175. புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
    அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 176. புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்
    அனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி
  • 177. புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
    அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 178. புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
    அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 179. விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
    அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 180. வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
    அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 181. நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
    அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 182. நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
    ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 183. புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
    அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 184. மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
    யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 185. மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
    யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 186. மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
    அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 187. மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
    அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 188. மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
    அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 189. மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
    அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 190. மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
    யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 191. மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்
    டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 192. மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்
    அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 193. மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
    அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 194. மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
    அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 195. மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
    அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 196. மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
    அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 197. மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா
    அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 198. மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
    றண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 199. மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
    அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 200. மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
    அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 201. மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
    அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 202. நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
    ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 203. நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
    வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 204. நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
    ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 205. நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை
    ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 206. நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
    ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 207. நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல
    ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 208. நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன
    லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 209. நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
    ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 210. நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
    ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 211. நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
    ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 212. நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
    ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 213. நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
    ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 214. நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
    ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 215. நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்
    ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 216. தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
    ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 217. தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
    வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 218. தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
    ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 219. தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
    ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 220. தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
    ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 221. தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
    ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 222. தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
    ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 223. தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
    ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 224. தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
    ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 225. தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
    ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 226. தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
    ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 227. தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
    ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 228. தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
    ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 229. தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
    ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 230. தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
    ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
  • 231. காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்
    ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 232. காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
    ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 233. காற்றினி லூறியல் காட்டுறு பலபல
    ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 234. காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில
    ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 235. காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
    ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 236. காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்
    ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 237. காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
    ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 238. காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
    ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 239. காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
    ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 240. காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
    ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 241. காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
    ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 242. காற்றிடை யுணரியல் கருதிய லாதிய
    ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 243. காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்
    ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 244. காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்
    தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 245. காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
    ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 246. காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
    ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 247. வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்
    அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 248. வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
    அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 249. வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
    அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 250. வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
    அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 251. வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
    அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 252. வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
    அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 253. வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
    அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 254. வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
    அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 255. வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
    அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 256. வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்
    அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 257. புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
    அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 258. புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
    அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 259. அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
    அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 260. அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
    அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 261. கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
    அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 262. தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை
    அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 263. அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
    அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 264. அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை
    அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 265. அகநடு வதனா லகப்புற நடுவை
    அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 266. அகப்புற நடுவா லணிபுற நடுவை
    அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 267. புறநடு வதனாற் புறப்புற நடுவை
    அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 268. புகலரு மகண்ட பூரண நடுவால்
    அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 269. புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
    அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 270. புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
    அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 271. அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
    அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 272. அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
    அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 273. வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
    ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 274. நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
    அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 275. நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்
    ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 276. புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
    அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 277. பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
    வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 278. உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
    அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 279. உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
    அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 280. கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
    அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 281. சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
    அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 282. பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
    அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 283. பரம்பர வெளியைப் பராபர வெளியில்
    அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 284. பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
    அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 285. பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
    அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 286. குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
    அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 287. மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
    அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 288. காலமே முதலிய கருவிகள் கலைவெளி
    ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 289. துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
    அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 290. இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
    அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 291. ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
    ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 292. சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
    அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 293. காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
    ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 294. அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
    அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 295. மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
    அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 296. தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
    அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 297. விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
    அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 298. ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
    ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 299. சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
    அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 300. நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை
    ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 301. பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும்
    அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 302. பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
    அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 303. எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
    அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 304. அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
    அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 305. உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
    அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 306. களவில கடல்வகை கங்கில கரையில
    அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 307. கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
    அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 308. கடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும்
    அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 309. கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்
    அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 310. மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்
    அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 311. ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
    அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி
  • 312. பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
    அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 313. நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
    ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 314. கோடியி லனந்த கோடிபல் கோடி
    ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 315. வித்திய லொன்றா விளைவியல் பலவா
    அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 316. விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
    அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 317. வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
    அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 318. வித்திடை முளையும் முளையிடை விளைவும்
    அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 319. வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
    அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 320. விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
    அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 321. முளையதின் முளையும் முளையினுண் முளையும்
    அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 322. வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
    அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 323. பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
    அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 324. ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும்
    அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 325. பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய
    அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 326. உறவினி லுறவும் உறவினிற் பகையும்
    அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 327. பகையினிற் பகையும் பகையினி லுறவும்
    அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 328. பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
    ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 329. துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
    அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 330. உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
    அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 331. அருவினுள் ளருவும் மருவதி லருவும்
    அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 332. கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
    அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 333. உருவதி லருவும் மருவதி லுருவும்
    அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 334. வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
    அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 335. சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
    அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 336. பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்
    அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 337. திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்
    அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 338. மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்
    அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 339. அடியினுள் ளடியும் மடியிடை யடியும்
    அடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 340. நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்
    அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 341. முடியினுண் முடியும் முடியினின் முடியும்
    அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 342. அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை
    அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 343. புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
    அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 344. அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட
    அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 345. புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற
    அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 346. பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
    ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 347. ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
    ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 348. அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
    அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 349. அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
    அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 350. வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
    அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 351. சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
    அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 352. பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
    அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 353. பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
    அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 354. பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
    அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 355. பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
    அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 356. பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
    அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 357. பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
    அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 358. தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்
    அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 359. உனற்கரு முயிருள வுடலுள வுலகுள
    வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 360. ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்
    ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
  • 361. பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்
    ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
  • 362. தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
    ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 363. முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
    அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 364. நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
    அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 365. வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
    ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 366. உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை
    அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 367. சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
    அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 368. உயிருறு முடலையு முடலுறு முயிரையும்
    அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 369. பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
    ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 370. முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
    அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 371. வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்
    ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 372. இன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித்
    தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 373. எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்
    அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 374. அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
    அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 375. தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
    தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 376. அகப்புற வமுதளித் தைவரா திகளை
    அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 377. தருமக வமுதாற் சத்திசத் தர்களை
    அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 378. காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
    ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 379. விச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை
    அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 380. போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
    ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 381. கலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம்
    அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 382. விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
    அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 383. துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
    அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 384. கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை
    அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 385. எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
    கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 386. எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
    கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 387. ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
    ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 388. சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
    அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 389. சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
    அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 390. வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
    ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 391. எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
    அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
  • 392. அண்டத் துரிசையு மகிலத் துரிசையும்
    அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 393. பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
    அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 394. உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்
    அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 395. உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்
    அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 396. காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
    ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 397. பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம்
    அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 398. மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
    கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 399. வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
    அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 400. சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
    அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 401. நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்
    ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 402. நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்
    ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 403. மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
    ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 404. மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
    ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 405. தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்
    அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 406. சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை
    அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 407. கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
    அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 408. பேருறு நீலப் பெருந்திரை யதனால்
    ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 409. பச்சைத் திரையாற் பரவெளி யதனை
    அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 410. செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
    அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 411. பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
    அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 412. வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
    அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 413. கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
    அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 414. விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
    அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 415. தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
    அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 416. திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
    அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 417. தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
    னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 418. சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
    அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 419. எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
    அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி
  • 420. விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
    அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 421. சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
    அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 422. மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
    அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 423. எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
    அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 424. கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
    அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 425. சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
    அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 426. சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
    அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
  • 427. படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
    அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி
  • 428. காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
    ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 429. அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்
    அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 430. மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை
    அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
  • 431. தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
    அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
  • 432. ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
    ஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி
  • 433. இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
    அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி
  • 434. செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்
    அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
  • 435. இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
    அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 436. செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட
    அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
  • 437. சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே
    அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
  • 438. ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது
    ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே
  • 439. ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல
    ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே
  • 440. ஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில
    ஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே
  • 441. களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி
    விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே
  • 442. மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
    ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே
  • 443. எழுநிலை மிசையே யின்புரு வாகி
    வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே
  • 444. நவநிலை மிசையே நடுவுறு நடுவே
    சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே
  • 445. ஏகா தசநிலை யாததி னடுவே
    ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே
  • 446. திரையோ தசநிலை சிவவெளி நடுவே
    வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
  • 447. ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
    பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
  • 448. எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே
    எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே
  • 449. மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
    அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே
  • 450. தானொரு தானாய்த் தானே தானாய்
    ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே
  • 451. அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்
    பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
  • 452. இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
    உயலுற விளங்கு மொருதனிப் பொருளே
  • 453. அருவினு ளருவா யருவரு வருவாய்
    உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே
  • 454. அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்
    உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே
  • 455. பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா
    யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே
  • 456. ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு
    கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே
  • 457. கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
    ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
  • 458. அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்
    பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே
  • 459. வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
    ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே
  • 460. பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க
    உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே
  • 461. பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
    பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே
  • 462. பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
    பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே
  • 463. பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
    பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே
  • 464. பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே
    தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே
  • 465. வரம்பரா பரமே வணம்பரா பரமே
    பரம்பரா பரமே பதம்பரா பரமே
  • 466. சத்திய பதமே சத்துவ பதமே
    நித்திய பதமே நிற்குண பதமே
  • 467. தத்துவ பதமே தற்பத பதமே
    சித்துறு பதமே சிற்சுக பதமே
  • 468. தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
    அம்பரம் பதமே யருட்பரம் பதமே
  • 469. தந்திர பதமே சந்திர பதமே
    மந்திர பதமே மந்தண பதமே
  • 470. நவந்தரு பதமே நடந்தரு பதமே
    சிவந்தரு பதமே சிவசிவ பதமே
  • 471. பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
    பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
  • 472. பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
    பரமமே பரம பதந்தருஞ் சிவமே
  • 473. அவனோ டவளா யதுவா யலவாய்
    நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
  • 474. எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்
    செம்பொரு ளாகிய சிவமே சிவமே
  • 475. ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு
    திருநிலை மேவிய சிவமே சிவமே
  • 476. மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
    தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
  • 477. புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
    சிரமுற நாட்டிய சிவமே சிவமே
  • 478. கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
    செல்வமு மளித்த சிவமே சிவமே
  • 479. அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
    தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
  • 480. சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
    சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே
  • 481. எங்கே கருணை யியற்கையி னுள்ளன
    அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
  • 482. யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
    சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே
  • 483. பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
    செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
  • 484. கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
    பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
  • 485. உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
    செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே
  • 486. பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
    உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே
  • 487. உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
    உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
  • 488. இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
    உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
  • 489. அருளலா தணுவு மசைந்திடா ததனால்
    அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
  • 490. அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
    அருளுற முயல்கவென் றருளிய சிவமே
  • 491. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
    இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
  • 492. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
    தெருளிது வெனவே செப்பிய சிவமே
  • 493. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
    மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
  • 494. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
    மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
  • 495. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
    றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
  • 496. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
    பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
  • 497. அருளறி யார்தமை யறியார் எம்மையும்
    பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
  • 498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
    பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
  • 499. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
    வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
  • 500. அருளே நம்மிய லருளே நம்முரு
    அருளே நம்வடி வாமென்ற சிவமே
  • 501. அருளே நம்மடி யருளே நம்முடி
    அருளே நம்நடு வாமென்ற சிவமே
  • 502. அருளே நம்மறி வருளே நம்மனம்
    அருளே நங்குண மாமென்ற சிவமே
  • 503. அருளே நம்பதி யருளே நம்பதம்
    அருளே நம்மிட மாமென்ற சிவமே
  • 504. அருளே நந்துணை யருளே நந்தொழில்
    அருளே நம்விருப் பாமென்ற சிவமே
  • 505. அருளே நம்பொரு ளருளே நம்மொளி
    அருளே நாமறி வாயென்ற சிவமே
  • 506. அருளே நங்குல மருளே நம்மினம்
    அருளே நாமறி வாயென்ற சிவமே
  • 507. அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
    அருளே நாமறி வாயென்ற சிவமே
  • 508. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
    அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
  • 509. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
    அருளர சியற்றுகென் றருளிய சிவமே
  • 510. உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்
    வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே
  • 511. நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத்
    தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே
  • 512. சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்
    சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
  • 513. ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
    கைவரப் புரிந்த கதிசிவ பதியே
  • 514. துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த
    இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே
  • 515. சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
    ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே
  • 516. கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
    வையமேல் வைத்த மாசிவ பதியே
  • 517. இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ
    றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே
  • 518. பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
    மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
  • 519. உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
    குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
  • 520. பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்
    திரமுற வருளிய திருவருட் குருவே
  • 521. மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
    றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே
  • 522. கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
    குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
  • 523. பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
    மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
  • 524. பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
    தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
  • 525. பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
    வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
  • 526. சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
    நவநிலை காட்டிய ஞானசற் குருவே
  • 527. சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
    அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
  • 528. அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே
    பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
  • 529. கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
    வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
  • 530. காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
    மாண்பத மளித்து வயங்குசற் குருவே
  • 531. செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
    உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
  • 532. உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
    பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
  • 533. சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
    தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
  • 534. சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
    மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
  • 535. எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
    வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
  • 536. சீருற வருளாந் தேசுற வழியாப்
    பேருற வென்னைப் பெற்றநற் றாயே
  • 537. பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
    பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
  • 538. ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
    ஈன்றமு தளித்த வினியநற் றாயே
  • 539. பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
    வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே
  • 540. தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
    உளந்தெளி வித்த வொருமைநற் றாயே
  • 541. அருளமு தேமுத லைவகை யமுதமும்
    தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே
  • 542. இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
    உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே
  • 543. நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
    பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே
  • 544. மற்றுள வமுத வகையெலா மெனக்கே
    உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே
  • 545. கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
    அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே
  • 546. துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
    கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே
  • 547. சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
    சத்தியை யளித்த தயவுடைத் தாயே
  • 548. சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
    வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
  • 549. சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
    சித்தியை யளித்த தெய்வநற் றாயே
  • 550. தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே
    என்னைமே லேற்றிய வினியநற் றாயே
  • 551. வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
    யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே
  • 552. எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
    கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே
  • 553. இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்
    தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே
  • 554. என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
    தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே
  • 555. தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்
    தரியா தணைத்த தயவுடைத் தாயே
  • 556. சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
    கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
  • 557. தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
    ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே
  • 558. துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
    இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
  • 559. எல்லா நன்மையு மென்றனக் களித்த
    எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே
  • 560. நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய
    தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே
  • 561. அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
    பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
  • 562. புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த
    தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே
  • 563. அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
    சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே
  • 564. இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
    துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே
  • 565. ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
    ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே
  • 566. எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
    பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
  • 567. தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
    செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
  • 568. தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
    என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே
  • 569. தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
    என்வடி வாக்கிய என்றனித் தந்தையே
  • 570. தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
    என்சித் தாக்கிய என்றனித் தந்தையே
  • 571. தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
    என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
  • 572. தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
    என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே
  • 573. தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
    என்னையு மொன்றென வியற்றிய தந்தையே
  • 574. தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
    என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
  • 575. தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
    என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
  • 576. சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
    றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
  • 577. மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
    இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே
  • 578. உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
    யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
  • 579. துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
    பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
  • 580. ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
    பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே
  • 581. எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்
    அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே
  • 582. இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
    தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
  • 583. பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
    சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
  • 584. தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
    கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
  • 585. துறையிது வழியிது துணிவிது நீசெயும்
    முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே
  • 586. எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
    கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே
  • 587. வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே
    யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
  • 588. இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
    தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே
  • 589. அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
    னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே
  • 590. அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
    இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே
  • 591. நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே
    வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
  • 592. உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
    டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே
  • 593. செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
    குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே
  • 594. குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
    அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
  • 595. பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
    கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே
  • 596. சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும்
    கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே
  • 597. களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்
    கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே
  • 598. தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
    வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே
  • 599. மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
    எனக்குற வாகிய என்னுயி ருறவே
  • 600. துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
    தென்னுற வாகிய வென்னுயி ருறவே
  • 601. என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்
    என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே
  • 602. அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
    இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
  • 603. பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
    இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே
  • 604. ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
    ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே
  • 605. சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே
    இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே
  • 606. துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
    உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
  • 607. அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
    என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே
  • 608. என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
    என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே
  • 609. சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
    இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
  • 610. தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
    இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
  • 611. படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
    இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே
  • 612. மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
    ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே
  • 613. உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
    இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே
  • 614. அறிவவை பலவா யறிவன பலவாய்
    எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே
  • 615. நினைவவை பலவாய் நினைவன பலவாய்
    இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே
  • 616. காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
    ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே
  • 617. செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
    எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே
  • 618. அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்
    எண்டற விளக்கு மென்றனிச் சித்தே
  • 619. எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
    எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே
  • 620. ஒன்றதி லொன்றன் றுரைக்கவும் படாதாய்
    என்றுமோர் படித்தா மென்றனி யின்பே
  • 621. இதுவது வென்னா வியலுடை யதுவாய்
    எதிரற நிறைந்த வென்றனி யின்பே
  • 622. ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
    ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
  • 623. அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
    எறிவற் றோங்கிய வென்றனி யின்பே
  • 624. விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
    யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே
  • 625. இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்
    எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே
  • 626. முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
    எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே
  • 627. எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்
    எல்லா வின்புமா மென்றனி யின்பே
  • 628. கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்
    விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்
  • 629. குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி
    மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய
  • 630. உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
    வணமுறு மின்ப மயமே யதுவாய்க்
  • 631. கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
    நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்
  • 632. உள்ளதா யென்று முள்ளதா யென்னுள்
    உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்
  • 633. எல்லா மினிப்ப வியலுறு சுவையளித்
    தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்
  • 634. சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
    மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
  • 635. செயற்கரு மனந்த சித்தியு மின்பமும்
    மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்
  • 636. பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
    ஆரண முடியுட னாகம முடியுங்
  • 637. கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
    நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே
  • 638. சத்திய வமுதே தனித்திரு வமுதே
    நித்திய வமுதே நிறைசிவ வமுதே
  • 639. சச்சிதா னந்தத் தனிமுத லமுதே
    மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே
  • 640. ஆனந்த வமுதே யருளொளி யமுதே
    தானந்த மில்லாத் தத்துவ வமுதே
  • 641. நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
    சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே
  • 642. பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
    கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே
  • 643. அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
    உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
  • 644. பனிமுத னீக்கிய பரம்பர வமுதே
    தனிமுத லாய சிதம்பர வமுதே
  • 645. உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
    அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே
  • 646. அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
    பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
  • 647. பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள
    பண்டமுங் காட்டிய பராபர மணியே
  • 648. நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
    அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே
  • 649. விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
    கண்பெற நடத்துங் ககனமா மணியே
  • 650. பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
    சார்புற நடத்துஞ் சரவொளி மணியே
  • 651. அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
    கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
  • 652. சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்
    விராவியுள் விளங்கும் வித்தக மணியே
  • 653. மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
    தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
  • 654. தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
    வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
  • 655. நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
    சிவமணி யெனுமருட் செல்வமா மணியே
  • 656. வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
    நான்பெற வளித்த நாதமந் திரமே
  • 657. கற்பம் பலபல கழியினு மழியாப்
    பொற்புற வளித்த புனிதமந் திரமே
  • 658. அகரமு முகரமு மழியாச் சிகரமும்
    வகரமு மாகிய வாய்மைமந் திரமே
  • 659. ஐந்தென வெட்டென வாறென நான்கென
    முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
  • 660. வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
    ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
  • 661. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
    மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
  • 662. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
    தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
  • 663. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
    சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
  • 664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
    கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
  • 665. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
    உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
  • 666. என்றே யென்னினு மிளமையோ டிருக்க
    நன்றே தருமொரு ஞானமா மருந்தே
  • 667. மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
    நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
  • 668. சிற்சபை நடுவே திருநடம் புரியும்
    அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
  • 669. இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
    தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்
  • 670. மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்
    ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்
  • 671. காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
    ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்
  • 672. கைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச்
    செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்
  • 673. உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
    வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
  • 674. புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
    வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
  • 675. மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்
    இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே
  • 676. எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா
    தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே
  • 677. தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்
    கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே
  • 678. எண்ணிய தோறு மியற்றுக வென்றனை
    யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே
  • 679. நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்
    போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே
  • 680. எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்
    பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே
  • 681. விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்
    புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே
  • 682. நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
    பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
  • 683. எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
    முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
  • 684. எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப்
    புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே
  • 685. ஊழிதோ றூழி யுலப்புறா தோங்கி
    வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே
  • 686. இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
    குதவினு முலவா தோங்குநன் னிதியே
  • 687. இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்
    றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே
  • 688. எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை
    அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே
  • 689. அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே
    கற்பனை கடந்த கருணைமா நிதியே
  • 690. நற்குண நிதியே சற்குண நிதியே
    நிற்குண நிதியே சிற்குண நிதியே
  • 691. பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
    வளமெலா நிறைந்த மாணிக்க மலையே
  • 692. மதியுற விளங்கு மரகத மலையே
    வதிதரு பேரொளி வச்சிர மலையே
  • 693. உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
    துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
  • 694. புற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர்
    அற்புதக் கடலே யமுதத்தண் கடலே
  • 695. இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய
    அருட்பெருங் கடலே யானந்தக் கடலே
  • 696. பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
    உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே
  • 697. என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள
    நன்றுற விளங்கிய நந்தனக் காவே
  • 698. சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர்
    ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே
  • 699. கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
    மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
  • 700. களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே
    இளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே
  • 701. தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
    தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே
  • 702. நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே
    வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே
  • 703. கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
    இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே
  • 704. புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே
    கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே
  • 705. இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே
    பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே
  • 706. சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே
    ஏலவே நாவுக் கினியகற் கண்டே
  • 707. உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே
    கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே
  • 708. நவையிலா தெனக்கு நண்ணிய நறவே
    சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே
  • 709. பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
    இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே
  • 710. உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி
    மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே
  • 711. இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
    உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே
  • 712. யாழுறு மிசையே யினியவின் னிசையே
    ஏழுறு மிசையே யியலரு ளிசையே
  • 713. திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே
    அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே
  • 714. நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே
    வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே
  • 715. நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே
    சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே
  • 716. நம்புறு மாகம நவிற்றிய பாட்டே
    எம்பல மாகிய வம்பலப் பாட்டே
  • 717. என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
    என்னிரு கண்ணே யென்கணுண் மணியே
  • 718. என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே
    என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே
  • 719. என்பெருந் தவமே என்றவப் பலனே
    என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே
  • 720. என்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே
    என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே
  • 721. என்பெரு நலமே யென்பெருங் குலமே
    என்பெரு வலமே யென்பெரும் புலமே
  • 722. என்பெரு வரமே யென்பெருந் தரமே
    என்பெரு நெறியே யென்பெரு நிலையே
  • 723. என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
    என்பெருந் தயவே யென்பெருங் கதியே
  • 724. என்பெரும் பதியே யென்னுயி ரியலே
    என்பெரு நிறைவே யென்றனி யறிவே
  • 725. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
    மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட
  • 726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
    மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட
  • 727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
    உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட
  • 728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
    உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட
  • 729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
    தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட
  • 730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
    கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட
  • 731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
    கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட
  • 732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
    கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட
  • 733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
    இனம்பெறு சித்த மியைந்து களித்திட
  • 734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
    சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட
  • 735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
    பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்
  • 736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
    சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட
  • 737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
    அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
  • 738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
    என்னுளத் தோங்கிய என்றனி யன்பே
  • 739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
    என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
  • 740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்
    என்னைவே தித்த என்றனி யன்பே
  • 741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
    என்னுளே விரிந்த என்னுடை யன்பே
  • 742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
    என்னுளே கனிந்த வென்னுடை யன்பே
  • 743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
    என்னுளே நிறைந்த என்றனி யன்பே
  • 744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
    யின்புறு வாக்கிய என்னுடை யன்பே
  • 745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
    என்னுளங் கலந்த என்றனி யன்பே
  • 746. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
    என்வசங் கடந்த என்னுடை யன்பே
  • 747. தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே
    என்னுளே பொங்கிய என்றனி யன்பே
  • 748. அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
    இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
  • 749. துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்
    லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே
  • 750. மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
    இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே
  • 751. இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
    நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
  • 752. கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
    உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே
  • 753. தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
    ஏற்றிய ஞான வியலொளி விளக்கே
  • 754. ஆகம முடிமே லருளொளி விளங்கிட
    வேகம தறவே விளங்கொளி விளக்கே
  • 755. ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி
    காரியம் விளக்குமோர் காரண விளக்கே
  • 756. தண்ணிய வமுதே தந்தென துளத்தே
    புண்ணியம் பலித்த பூரண மதியே
  • 757. உய்தர வமுத முதவியென் னுளத்தே
    செய்தவம் பலித்த திருவளர் மதியே
  • 758. பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
    நிதியெலா மளித்த நிறைதிரு மதியே
  • 759. பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
    மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
  • 760. உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
    வயங்கிய கருணை மழைபொழி மழையே
  • 761. என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
    மன்னிய கருணை மழைபொழி மழையே
  • 762. உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
    வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
  • 763. நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே
    மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
  • 764. தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்
    வாய்மையாற் கருணை மழைபொழி மழையே
  • 765. வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
    செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே
  • 766. திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே
    வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே
  • 767. அலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ
    உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே
  • 768. முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
    என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
  • 769. ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
    ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே
  • 770. உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
    வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே
  • 771. நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
    வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
  • 772. வேதமு மாகம விரிவும் பரம்பர
    நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே
  • 773. எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள்
    நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே
  • 774. வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
    நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
  • 775. இரவொடு பகலிலா வியல்பொது நடமிடு
    பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே
  • 776. வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி
    பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே
  • 777. சமரச சத்தியச் சபையி னடம்புரி
    சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே
  • 778. சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
    அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
  • 779. மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
    அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
  • 780. வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
    ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி
  • 781. என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
    அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
  • 782. உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
    அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
  • 783. சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
    துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
  • 784. சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
    சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
  • 785. அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
    இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்
  • 786. ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
    சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
  • 787. அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
    அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
  • 788. வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
    அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 789. உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
    இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
  • 790. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
    ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 791. மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
    யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
  • 792. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
    ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 793. சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
    சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
  • 794. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
    ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 795. உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
    விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
  • 796. சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
    உத்தம னாகுக வோங்குக வென்றனை
  • 797. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
    ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
  • 798. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அகவல் // அருட்பெருஞ்ஜோதி அகவல்