திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
விண்ணப்பப் பதிகம்
viṇṇappap patikam
அபராத விண்ணப்பம்
aparāta viṇṇappam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

081. தரிசனப் பதிகம்
tarisaṉap patikam

    கோயில்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. திருவார் பொன்னம் பலநடுவே தெள்ளார் அமுதத் திரள்அனைய
    உருவார் அறிவா னந்தநடம் உடையார் அடியார்க் குவகைநிலை
    தருவார் அவர்தம் திருமுகத்தே ததும்பும் இளவெண் ணகைகண்டேன்
    இருவா தனைஅற் றந்தோநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
  • 2. பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த
    மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும்
    அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன்
    என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ.
  • 3. தாயிற் பெரிய கருணையினார் தலைமா லையினார் தாழ்சடையார்
    வாயிற் கினிய புகழுடைய வள்ளல் அவர்தந் திருஅழகைக்
    கோயிற் கருகே சென்றுமனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன்
    ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.
  • 4. புன்கண் அகற்றும் மெய்யடியார் போற்றும் பொன்னம் பலநடுவே
    வன்கண் அறியார் திருநடஞ்செய் வரதர் அமுதத் திருமுகத்தை
    முன்கண் உலகில் சிறியேன்செய் முழுமா தவத்தால் கண்டேன்நான்
    என்கண் அனையார் அவர்முகத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
  • 5. அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே
    வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார்
    மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன்
    இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
  • 6. இம்மா நிலத்தில் சிவபதமீ தென்னும் பொன்னம் பலநடுவே
    அம்மால் அறியா அடிகள்அடி அசைய நடஞ்செய் வதுகண்டேன்
    எம்மால் அறியப் படுவதல என்என் றுரைப்பேன் ஏழையன்யான்
    எம்மான் அவர்தந் திருநடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ.
  • 7. சிறியேன் தவமோ எனைஈன்றாள் செய்த தவமோ யான்அறியேன்
    மறியேர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார் தமைக்கண்டேன்
    பிறியேன் எனினும் பிரிந்தேன்நான் பேயேன் அந்தப் பிரிவினைக்கீழ்
    எறியேன் அந்தோ அவர்தம்மை இன்னும் ஒருகால் காண்பேனோ.
  • 8. அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்தமைத்
    தெருளே வடிவாம் அடியவர்போல் சிறியேன் கண்டேன் சீர்உற்றேன்
    மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதிகெட்டேன்
    இருளேர் மனத்தேன் அவர்தமைநான் இன்னும் ஒருகால் காண்பேனோ.
  • 9. அன்னோ திருஅம் பலத்தேஎம் ஐயர் உருக்கண் டேன்அதுதான்
    பொன்னோ பவளப் பொருப்பதுவோ புதுமா ணிக்க மணித்திரளோ
    மின்னோ விளக்கோ விரிசுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன்
    என்னோ அவர்தந் திருஉருவை இன்னும் ஒருகால் காண்பேனோ.
  • 10. பொன்என் றுரைக்கும் அம்பலத்தே புனித னார்தம் அழகியலை
    உன்என் றுரைப்பேன் என்னேஎன் உள்ளம் சிறிதும் உணர்ந்ததிலை
    மின்என் றுரைக்கும் படிமூன்று விளக்கும் மழுங்கும் எனில்அடியேன்
    என்என் றுரைப்பேன் அவர்அழகை இன்னும் ஒருகால் காண்பேனோ.

தரிசனப் பதிகம் // தரிசனப் பதிகம்

No audios found!