திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திருவருட்பேறு
tiruvaruṭpēṟu
கைம்மாறின்மை
kaimmāṟiṉmai
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

086. நெஞ்சோடு நேர்தல் (தில்லையும் பார்வதிபுரமும்)
neñsōṭu nērtal (tillaiyum pārvatipuramum)

    தில்லையும் பார்வதிபுரமும்
    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்
    தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை
    யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையோ
    ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து.
  • 2. நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்
    போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே
    ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி
    மன்றொன்று வானை மகிழ்ந்து.
  • 3. ஈற்றில்ஒன்றாய் மற்றை இயல்வருக்க மாகியபேர்
    ஏற்ற பறவை இருமைக்கும் - சாற்றுவமை
    அன்றே தலைமகட்கா அம்பலவர் தம்பால்ஏ(கு)
    என்றே எனக்குநினக் கும்.
  • 4. கைத்தலைமே லிட்டலையிற் கண்ணுடையாள் கால்மலர்க்குக்
    கைத்தலைமே லிட்டலையிற் கண்­ர்கொண் - டுய்த்தலைமேல்
    காணாயேல் உண்மைக் கதிநிலையைக் கைக்கணியாக்
    காணாயே நெஞ்சே களித்து.
  • 5. கல்லோ மணலோ கனியோ கரும்போஎன்(று)
    எல்லோமும் இங்கே இருக்கின்றோம் - சொல்லோம்
    அதுவாய் அதன்பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
    பொதுவாய் நடிக்கின்ற போது.
  • 6. அதுபார் அதிலே அடைந்துவதி மற்றாங்(கு)
    அதில்ஏழை யைப்புரமெய் யன்பால் - அதிலே
    நலமே வதிலேநின் னாவூர் திருவம்
    பலமேவக் காட்டும் பரிசு.
  • 7. நம்பார் வதிபாக னம்புரத்தில் நின்றுவந்தோன்
    அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் - வெம்பாது
    பார்த்தால் அளிப்பான் தெரியுஞ் சிதம்பரம்நீ
    பார்த்தாய்இப் பாட்டின் பரிசு.
  • 8. நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
    அடிப்பாவை யும்286 வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய
    நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும்
    இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்.
  • 9. பூமி பொருந்து புரத்தே287 நமதுசிவ
    காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி
    அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில்
    களித்தான் அவன்றான் களித்து.

    • 286. அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு., பொ. சு., பி. இரா.,ச. மு. க.
    • 287. பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம்(பூமி - பார், பொருந்து - வதி).

ஞானசிதம்பர வெண்பா // நெஞ்சோடு நேர்தல் (தில்லையும் பார்வதிபுரமும்)

No audios found!