திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பேறடைவு
pēṟaṭaivu
இறைவரவு இயம்பல்
iṟaivaravu iyampal
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

101. உய்வகை கூறல்
uyvakai kūṟal

    கலிநிலைத் துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்
    பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்
    மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்
    தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே.
  • 2. வாரம் செய்தபொன் மன்றிலே நடிக்கும்பொன் அடிக்கே
    ஆரம் செய்தணிந் தவர்க்குமுன் அரிஅயன் முதலோர்
    வீரம் செல்கிலா தறிமினோ வேதமேல் ஆணை
    ஓரம் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் உலகீர்.
  • 3. ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
    சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
    நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
    வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.
  • 4. நாதம் சொல்கின்ற திருச்சிற்றம் பலத்திலே நடிக்கும்
    பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர்என் றறிமின்
    வேதம் சொல்கின்ற பரிசிது மெய்ம்மையான் பக்க
    வாதஞ் சொல்கிலேன் நடுநின்று சொல்கின்றேன் மதித்தே.
  • 5. துரிய மேல்பர வெளியிலே சுகநடம் புரியும்
    பெரிய தோர்அருட் சோதியைப் பெறுதலே எவைக்கும்
    அரிய பேறுமற் றவைஎலாம் எளியவே அறிமின்
    உரிய இம்மொழி மறைமொழி சத்தியம் உலகீர்.
  • 6. ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
    பாக மாம்பர வெளிநடம் பரவுவீர் உலகீர்
    மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்
    யோக மாந்தர்க்குக் காலமுண் டாகவே உரைத்தேன்.
  • 7. வான நாடரும் நாடரும் மன்றிலே வயங்கும்
    ஞான நாடகக் காட்சியே நாம்பெறல் வேண்டும்
    ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும்
    ஈன நாடகப் பெரியர்காள் வம்மினோ ஈண்டே.
  • 8. சமயம் ஓர்பல கோடியும் சமயங்கள் தோறும்
    அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞானசன் மார்க்கத்
    தெமையும் உம்மையும் உடையதோர் அம்பலத் திறையும்
    அமைய ஆங்கதில் நடம்புரி பதமும்என் றறிமின்.
  • 9. ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவைமேல்
    வீறு சேர்ந்தசித் தாந்தவே தாந்தநா தாந்தம்
    தேறும் மற்றைய அந்தத்தும் சிவம்ஒன்றே அன்றி
    வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.
  • 10. கலைஇ ருந்ததோர் திருச்சிற்றம் பலத்திலே கருணை
    நிலைஇ ருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம்
    மலைஇ ருந்தென இருப்பிரேல் வம்மினோ அன்றிக்
    கொலைவி ரும்புவீர் எனிற்புறத் தேகுமின் குலைந்தே.
  • 11. கதிஇ ருக்கின்ற திருச்சிற்றம் பலத்திலே கருணை
    நீதிஇ ருக்கின்ற தாதலால் நீவீர்கள் எல்லாம்
    பதிய இங்ஙனே வம்மினோ கொலைபயில் வீரேல்
    விதியை நோமினோ போமினோ சமயவெப் பகத்தே.
  • 12. அருள்வி ளங்கிய திருச்சிற்றம் பலத்திலே அழியாப்
    பொருள்வி ளங்குதல் காண்மினோ காண்மினோ புவியீர்
    மருள்உ ளங்கொளும் வாதனை தவிர்ந்தருள் வலத்தால்
    தெருள்வி ளங்குவீர் ஞானசன் மார்க்கமே தெளிமின்.

    • 355. அமைய அம்பலத்தாடும் பொற்பதமும் என்றறிமின் - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா.

அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல் // உய்வகை கூறல்

No audios found!