திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
திரு உலாப் பேறு
tiru ulāp pēṟu
இரங்கன் மாலை
iraṅkaṉ mālai
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

002. நாரையும் கிளியும் நாட்டுறு தூது
nāraiyum kiḷiyum nāṭṭuṟu tūtu

    தலைவி பறவைமேல் வைத்துப் பையுளெய்தல்
    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. கண்ணன் நெடுநாள் மண்ணிடந்தும் காணக் கிடையாக் கழலுடையார்
    நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ
    அண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும்
    உண்ணும் உணவோ டுறக்கமுநீத் துற்றாள் என்றிவ் வொருமொழியே.
  • 2. மன்னுங் கருணை வழிவிழியார் மதுர மொழியார் ஒற்றிநகர்த்
    துன்னும் அவர்தந் திருமுன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
    மின்னுந் தேவர் திருமுடிமேல் விளங்குஞ் சடையைக் கண்டவள்தன்
    பின்னுஞ் சடையை அவிழ்த்தொன்றும் பேசாள் எம்மைப் பிரிந்தென்றே.
  • 3. வடிக்குந் தமிழ்த்தீந் தேன்என்ன வசனம் புகல்வார் ஒற்றிதனில்
    நடிக்குந் தியாகர் திருமுன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
    பிடிக்குங் கிடையா நடைஉடைய பெண்க ளெல்லாம் பிச்சிஎன
    நொடிக்கும் படிக்கு மிகுங்காம நோயால் வருந்தி நோவதுவே.
  • 4. மாய மொழியார்க் கறிவரியார் வண்கை உடையார் மறைமணக்கும்
    தூய மொழியார் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
    நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள்
    ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே.
  • 5. ஒல்லார் புரமூன் றெரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும்
    நல்லார் வல்லார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியே
    அல்லார் குழலாள் கண்­ராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கனையார்
    பல்லார் சூழ்ந்து பழிதூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல்என்றே.
  • 6. ஓவா நிலையார் பொற்சிலையார் ஒற்றி நகரார் உண்மைசொலும்
    தூவாய் மொழியார் அவர்முன்போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ
    பூவார் முடியாள் பூமுடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள்
    ஆவா என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம்என்றே.
  • 7. வட்ட மதிபோல் அழகொழுகும் வதன விடங்கர் ஒற்றிதனில்
    நட்ட நவில்வார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றாயோ
    கட்ட அவிழ்ந்த குழல்முடியாள் கடுகி விழுந்த கலைபுனையாள்
    முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்தென்றே.
  • 8. வேலை விடத்தை மிடற்றணிந்த வெண்­ற் றழகர் விண்ணளவும்
    சோலை மருவும் ஒற்றியிற்போய்ச் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
    மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள்
    காலை அறியாள் பகல்அறியாள் கங்குல் அறியாள் கனிந்தென்றே.
  • 9. மாண்காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப்பொன்
    நாண்காத் தளித்தார் அவர்முன்போய் நாராய் நின்று நவிற்றுதியோ
    பூண்காத் தளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன்மால் ஆதியராம்
    சேண்காத் தளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன்என்றே.
  • 10. தேசு பூத்த வடிவழகர் திருவாழ் ஒற்றித் தேவர்புலித்
    தூசு பூத்த கீளுடையார் சுகங்காள் அவர்முன் சொல்லீரோ
    மாசு பூத்த மணிபோல வருந்தா நின்றாள் மங்கையர்வாய்
    ஏசு பூத்த அலர்க்கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணிஎன்றே.

நாரையும் கிளியும் நாட்டுறு தூது // நாரையும் கிளியும் நாட்டுறு தூது

No audios found!