திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நாரையும் கிளியும் நாட்டுறு தூது
nāraiyum kiḷiyum nāṭṭuṟu tūtu
திரு உலா வியப்பு
tiru ulā viyappu
மூன்றாம் திருமுறை / Third Thirumurai

003. இரங்கன் மாலை
iraṅkaṉ mālai

    தலைவி இரங்கல்
    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. நன்று புரிவார் திருவொற்றி நாதர் எனது நாயகனார்
    மன்றுள் அமர்வார் மால்விடைமேல் வருவார் அவரை மாலையிட்ட
    அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்தறியேன்
    குன்று நிகர்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 2. தகைசேர் ஒற்றித் தலத்தமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க
    நகைசேர்ந் தவரை மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்
    பகைசேர் மதன்பூச் சூடல்அன்றிப் பதப்பூச் சூடப் பார்த்தறியேன்
    குகைசேர் இருட்பூங் குழலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 3. தோடார் குழையார் ஒற்றியினார் தூயர்க் கலது சுகம்அருள
    நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும்
    சூடா மலர்போல் இருந்ததல்லால் சுகமோர் அணுவுந் துய்த்தறியேன்
    கோடா ஒல்குங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 4. அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றி யார்நீல
    கண்டர் அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
    பண்டம் அறியேன் பலன்அறியேன் பரிவோ டணையப் பார்த்தறியேன்
    கொண்டன் மணக்குங் கோதாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 5. பாடல் கமழும் பதம்உடையார் பணைசேர் ஒற்றிப் பதிஉடையார்
    வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
    ஆடல் அளிசூழ் குழலாய்உன் ஆணை ஒன்றும் அறியனடி
    கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 6. துடிசேர் கரத்தார் ஒற்றியில்வாழ் சோதி வெண்­ற் றழகர்அவர்
    கடிசேர்ந் தென்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
    பிடிசேர் நடைநேர் பெண்களைப்போல் பின்னை யாதும் பெற்றறியேன்
    கொடிநேர் இடையாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 7. ஒற்றி நகர்வாழ் உத்தமனார் உயர்மால் விடையார் உடையார்தாம்
    பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகைதெரிந்து
    வெற்றி மதனன் வீறடங்க மேவி அணைந்தார் அல்லரடி
    குற்றம் அணுவும் செய்தறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 8. வானும் புவியும் புகழ்ஒற்றி வாணர் மலர்க்கை மழுவினொடு
    மானும் உடையார் என்றனக்கு மாலை யிட்ட தொன்றல்லால்
    நானும் அவருங் கூடியொரு நாளும் கலந்த தில்லையடி
    கோனுந் தியவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 9. தெறித்து மணிகள் அலைசிறக்கும் திருவாழ் ஒற்றித் தேவர்எனை
    வறித்திங் கெளியேன் வருந்தாமல் மாலை யிட்ட நாள்அலது
    மறித்தும் ஒருநாள் வந்தென்னை மருவி அணைய நானறியேன்
    குறித்திங் குழன்றேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 10. மின்னோ டொக்கும் வேணியினார் விமலர் ஒற்றி வாணர்எனைத்
    தென்னோ டொக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்தறியார்
    என்னோ டொத்த பெண்களெலாம் ஏசி நகைக்க இடருழந்தேன்
    கொன்னோ டொத்த கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 11. உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
    தொடுத்திங் கெனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
    படுத்தும் அறியார் எனக்குரிய பரிவிற் பொருள்ஓர் எள்ளளவும்
    கொடுத்தும் அறியார் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 12. உழைஒன் றணிகைத் தலம்உடையார் ஒற்றி உடையார் என்றனக்கு
    மழைஒன் றலர்பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி
    பிழைஒன் றறியேன் பெண்களெலாம் பேசி நகைக்கப் பெற்றேன்காண்
    குழைஒன் றியகண் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 13. ஏடார் பொழில்சூழ் ஒற்றியினார் என்கண் அனையார் என்தலைவர்
    பீடார் மாலை இட்டதன்றிப் பின்னோர் சுகமும் பெற்றறியேன்
    வாடாக் காதற் பெண்களெலாம் வலது பேச நின்றனடி
    கோடார் கொங்கை மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 14. கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண்மூன் றுடையார் கனவினிலும்
    வஞ்சம் அறியார் என்றனக்கு மாலைஇட்ட தொன்றல்லால்
    மஞ்சம் அதனில் என்னோடு மருவி இருக்க நான்அறியேன்
    கொஞ்சம் மதிநேர் நுதலாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 15. ஆலம் இருந்த களத்தழகர் அணிசேர் ஒற்றி ஆலயத்தார்
    சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது
    கால நிரம்ப அவர்புயத்தைக் கட்டி அணைந்த தில்லையடி
    கோல மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 16. நெய்தல் பணைசூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால்அயனும்
    எய்தற் கரியார் மாலையிட்டார் எனக்கென் றுரைக்கும் பெருமைஅல்லால்
    உய்தற் கடியேன் மனையின்கண் ஒருநா ளேனும் உற்றறியார்
    கொய்தற் கரிதாங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 17. போர்க்கும் உரியார் மால்பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
    யார்க்கும் அரியார் எனக்கெளியர் ஆகி என்னை மாலையிட்டார்
    ஈர்க்கும் புகுதா முலைமதத்தை இன்னுந் தவிர்த்தார் அல்லரடி
    கூர்க்கும் நெடுவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 18. இறையார் ஒற்றி யூரினிடை இருந்தார் இனியார் என்கணவர்
    மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ
    பொறையார் இரக்கம் மிகவுடையார் பொய்ஒன் றுரையார் பொய்யலடி
    குறையா மதிவாண் முகத்தாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 19. உடுப்பார் கரித்தோல் ஒற்றிஎனும் ஊரார் என்னை உடையவனார்
    மடுப்பார் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழைஉரைத்துக்
    கெடுப்பார் இல்லை என்சொலினும் கேளார் எனது கேள்வர்அவர்
    கொடுப்பார் என்றோ மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 20. எருதில் வருவார் ஒற்றியுளார் என்நா யகனார் எனக்கினியார்
    வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்
    கருதி அவர்தங் கட்டளையைக் கடந்து நடந்தேன் அல்லவடி
    குருகுண் கரத்தாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 21. மாவென் றுரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
    வாவென் றுரையார் போஎன்னார் மௌனஞ் சாதித் திருந்தனர்காண்
    ஆவென் றலறிக் கண்­ர்விட் டழுதால் துயரம் ஆறுமடி
    கோவென் றிருவேல் கொண்டாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 22. நாட்டும் புகழார் திருஒற்றி நகர்வாழ் சிவனார் நன்மையெலாம்
    காட்டும் படிக்கு மாலையிட்ட கணவர் எனஓர் காசளவில்
    கேட்டும் அறியேன் தந்தறியார் கேட்டால் என்ன விளையுமடி
    கோட்டு மணிப்பூண் முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 23. வெற்பை வளைத்தார் திருஒற்றி மேவி அமர்ந்தார் அவர்எனது
    கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பதல்லால்
    சிற்ப மணிமே டையில்என்னைச் சேர்ந்தார் என்ப தில்லையடி
    கொற்பை அரவின் இடையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 24. என்ன கொடுத்தும் கிடைப்பரியார் எழிலார் ஒற்றி நாதர்எனைச்
    சின்ன வயதில் மாலையிட்டுச் சென்றார் சென்ற திறன்அல்லால்
    இன்னும் மருவ வந்திலர்காண் யாதோ அவர்தம் எண்ணமது
    கொன்னுண் வடிவேற் கண்ணாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 25. கரும்பின் இனியார் கண்ணுதலார் கடிசேர் ஒற்றிக் காவலனார்
    இரும்பின் மனத்தேன் தனைமாலை இட்டார் இட்ட அன்றலது
    திரும்பி ஒருகால் வந்தென்னைச் சேர்ந்து மகிழ்ந்த தில்லையடி
    குரும்பை அனைய முலையாய்என் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 26. தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தார்அவர்
    மாது மகிழ்தி எனஎன்னை மாலை யிட்டார் மாலையிட்ட
    போது கண்ட திருமுகத்தைப் போற்றி மறித்தும் கண்டறியேன்
    கோது கண்டேன் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 27. வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் மேலார் ஒற்றி யூரர்என்பால்
    சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் சேர்ந்தார் அல்லர் யான்அவரை
    அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
    குன்றிற் றுயர்கொண் டழும்எனது குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 28. தோளா மணிநேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார்
    மாளா நிலையர் என்றனக்கு மாலை இட்டார் மருவிலர்காண்
    கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்த தெனினும்அதைக்
    கோளார் உரைப்பார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 29. வாடா திருந்தேன் மழைபொழியும் மலர்க்கா வனஞ்சூழ் ஒற்றியினார்
    ஏடார் அணிபூ மாலைஎனக் கிட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
    தேடா திருந்தேன் அல்லடியான் தேடி அருகிற் சேர்ந்தும்எனைக்
    கூடா திருந்தார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 30. நலத்திற் சிறந்த ஒற்றிநகர் நண்ணும் எனது நாயகனார்
    வலத்திற் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
    நிலத்திற் சிறந்த உறவினர்கள் நிந்தித் தையோ எனைத்தமது
    குலத்திற் சேரார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.
  • 31. ஈர்ந்தேன் அளிசூழ் ஒற்றிஉளார் என்கண் மணியார் என்கணவர்
    வார்ந்தேன் சடையார் மாலையிட்டும் வாழா தலைந்து மனமெலிந்து
    சோர்ந்தேன் பதைத்துத் துயர்க்கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
    கூர்ந்தேன் குழலாய் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே.

இரங்கன் மாலை // இரங்கன் மாலை

No audios found!