திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அருளியல் வினாவல்
aruḷiyal viṉāval
காட்சிப் பெருமிதம்
kāṭsip perumitam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

013. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
tirumullaivāyil tiruviṇṇappam

    கலிவிருத்தம்
    திருசிற்றம்பலம்
  • 1. தாயின் மேவிய தற்பர மேமுல்லை
    வாயின் மேவிய மாமணி யேஉன்தன்
    கோயின் மேவிநின் கோமலர்த் தாள்தொழா
    தேயின் மேவி இருந்தனன் என்னையே.
  • 2. தில்லை வாய்ந்த செழுங்கனி யே திரு
    முல்லை வாயில் முதல்சிவ மூர்த்தியே
    தொல்லை யேன்உன்தன் தூய்திருக் கோயிலின்
    எல்லை சேரஇன் றெத்தவம் செய்ததே.
  • 3. வளங்கொ ளும்முல்லை வாயிலில் மேவிய
    குளங்கொ ளும்கண் குருமணி யேஉனை
    உளம்கொ ளும்படி உன்திருக் கோயில்இக்
    களங்கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.
  • 4. மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய
    விலையி லாமணி யேவிளக் கேசற்றும்
    குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில்
    தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே.
  • 5. சீர்சி றக்கும் திருமுல்லை வாயிலில்
    ஏர்சி றக்கும் இயன்மணி யேகொன்றைத்
    தார்சி றக்கும் சடைக்கனி யேஉன்தன்
    ஊர்சி றக்க உறுவதெவ் வண்ணமே.
  • 6. சேல்கொள் பொய்கைத் திருமுல்லை வாயிலில்
    பால்கொள் வண்ணப் பரஞ்சுட ரேவிடை
    மேல்கொள் சங்கர னேவிம லாஉன்தன்
    கால்கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.
  • 7. வண்ண மாமுல்லை வாயிலின் மேவிய
    அண்ண லேஅமு தேஅரை சேநுதல்
    கண்ண னேஉனைக் காணவந் தோர்க்கெலாம்
    நண்ண ருந்துயர் நல்குதல் நன்றதோ.
  • 8. மண்ணின் ஓங்கி வளர்முல்லை வாயில்வாழ்
    கண்ணுன் மாமணி யேகரும் பேஉனை
    எண்ணும் அன்பர் இழிவடைந் தால்அது
    பண்ணும் நின்அருள் பாரிடை வாழ்கவே.
  • 9. தீதி லாததி ருமுல்லை வாயில்வாழ்
    கோதி லாதகு ணப்பெரும் குன்றமே
    வாதி லாதுனை வாழ்த்தவந் தோர்தமை
    ஏதி லார்என்றி ருப்பதும் என்கொலோ.
  • 10. தேசு லாவிய சீர்முல்லை வாயில்வாழ்
    மாசி லாமணி யேமருந் தேசற்றும்
    கூசி டாமல்நின் கோயில்வந் துன்புகழ்
    பேசி டாத பிழைபொறுத் தாள்வையே.

திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம் // திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்

No audios found!