திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பற்றின் திறம் பகர்தல்
paṟṟiṉ tiṟam pakartal
அவத்தொழிற் கலைசல்
avattoḻiṟ kalaisal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

040. அடிமைத் திறத் தலைசல்
aṭimait tiṟat talaisal

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. தேவர் அறியார் மால்அறியான் திசைமா முகத்தோன் தான்அறியான்
    யாவர் அறியார் திருஒற்றி யப்பா அடியேன் யாதறிவேன்
    மூவர் திருப்பாட் டினுக்கிசைந்தே முதிர்தீம் பாலும் முக்கனியும்
    காவல் அமுதும் நறுந்தேனும் கைப்ப இனிக்கும் நின்புகழே.
  • 2. புகழே விரும்பிப் புலன்இழந்தேன் போந்துன் பதத்தைப் போற்றுகிலேன்
    இகழேன் எனைநான் ஒற்றியப்பா என்னை மதித்தேன் இருள்மனத்தேன்
    திகழ்ஏழ் உலகில் எனைப்போல்ஓர் சிறியர் அறியேன் தீவினையை
    அகழேன்எனினும் எனையாளா தகற்றல் அருளுக் கழகன்றே.
  • 3. அன்றும் அறியார் மாதவரும் அயனும் மாலும் நின்நிலையை
    இன்றும் அறியார் அன்றியவர் என்றும் அறியார் என்னில்ஒரு
    நன்றும் அறியேன் நாயடியேன் நான்எப்படிதான் அறிவேனோ
    ஒன்றும் நெறிஏ தொற்றியப்பா ஒப்பார் இல்லா உத்தமனே.
  • 4. ஒப்பார் இல்லா ஒற்றியப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம்
    வெப்பார் குழியில் கண்மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன்
    இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு
    விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுத்தேனே.
  • 5. விடுத்தேன் தவத்தோர் நெறிதன்னை வியந்தேன் உலக வெந்நெறியை
    மடுத்தேன் துன்ப வாரிதனை வஞ்ச மனத்தர் மாட்டுறவை
    அடுத்தேன் ஒற்றி யப்பாஉன் அடியை நினையேன் அலமந்தேன்
    படுத்தே நமன்செக் கிடும்போது படிறேன் யாது படுவேனோ.
  • 6. படுவேன் அல்லேன் நமன்தமரால் பரிவேன் அல்லேன் பரமநினை
    விடுவேன் அல்லேன் என்னையும்நீ விடுவாய் அல்லை இனிச்சிறிதும்
    கெடுவேன் அல்லேன் சிறியார்சொல் கேட்பேன் அல்லேன் தருமநெறி
    அடுவேன் அல்லேன் திருஒற்றி யப்பா உன்றன் அருள்உண்டே.
  • 7. உண்டோ எனைப்போல் மதிஇழந்தோர் ஒற்றி யப்பா உன்னுடைய
    திண்டோள் இலங்கும் திருநீற்றைக் காண விரும்பேன் சேர்ந்தேத்தேன்
    எண்தோள் உடையாய் என்றிரங்கேன் இறையும் திரும்பேன் இவ்வறிவைக்
    கொண்டே உனைநான் கூடுவன்நின் குறிப்பே தொன்றும் அறியேனே.
  • 8. அறியேன் உன்தன் புகழ்ப்பெருமை அண்ணா ஒற்றி யப்பாநான்
    சிறியேன் எனினும் நினைஅன்றித் தெளியேன் மற்றோர் தேவர்தமை
    வெறியேன் பிழையைக் குறித்தெனைக்கை விட்டால் என்செய்வேன்அடியேன்
    நெறியே தருதல் நின்கடன்காண் நின்னைப் பணிதல் என்கடனே.
  • 9. கடனே அடியர் தமைக்காத்தல் என்றால் கடையேன் அடியன்அன்றோ
    உடன்நேர் பிணியும் ஒழித்திலைஎன் உள்ளத் துயரும் தவிர்த்திலையே
    விடன்நேர் கண்டத் தின்னமுதே வேத முடியில் விளங்கொளியே
    அடன்ஏர் விடையாய் திருஒற்றி யப்பா உனைநான் அயர்ந்திலனே.
  • 10. இலனே மற்றோர் துணைசிறிதும் என்னே காமம் எனும்கடலில்
    மலனேன் வருந்தக் கண்டிருத்தல் மணியே அருளின் மரபன்றே
    அலனே அயலான் அடியேன்நான் ஐயாஒற்றி யப்பாநல்
    நலனேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினனே.
  • 11. நாடி அலுத்தேன் என்அளவோ நம்பா மன்றுள் நன்குநடம்
    ஆடி மகிழும் திருஒற்றி அப்பா உன்தன் அருட்புகழைக்
    கோடி அளவில் ஒருகூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும்
    தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.

அடிமைத் திறத் தலைசல் // அடிமைத் திறத் தலைசல்

No audios found!