திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தவத்திறம் போற்றல்
tavattiṟam pōṟṟal
சிகாமணி மாலை
sikāmaṇi mālai
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

030. நெஞ்சுறுத்த திருநேரிசை
neñsuṟutta tirunērisai

    திருவொற்றியூர்
    நேரிசை வெண்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. பொன்னார் விடைக்கொடிஎம் புண்ணியனைப் புங்கவனை
    ஒன்னார் புரம்எரித்த உத்தமனை - மன்னாய
    அத்தனைநம் ஒற்றியூர் அப்பனைஎல் லாம்வல்ல
    சித்தனைநீ வாழ்த்துதிநெஞ் சே.
  • 2. நெஞ்சே உலக நெறிநின்று நீமயலால்
    அஞ்சேல்என் பின்வந் தருள்கண்டாய் - எஞ்சாத்
    தவக்கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்தேத்தும் ஒற்றிச்
    சிவக்கொழுந்தை வாழ்த்துதும்நாம் சென்று.
  • 3. சென்றுசென்று நல்காத செல்வர்தலை வாயிலிலே
    நின்று நின்று வாடுகின்ற நெஞ்சமே - இன்றுதிரு
    ஒற்றியப்பன் தாண்மலரை உன்னுதியேல் காதலித்து
    மற்றிசைப்ப தெல்லாம் வரும்.
  • 4. வருநாள் உயிர்வாழும் மாண்பறியோம் நெஞ்சே
    ஒருநாளும் நீவேறொன் றுன்னேல் - திருநாளைப்
    போவான் தொழுமன்றில் புண்ணியனை ஒற்றியில்தாய்
    ஆவான் திருவடிஅல் லால்.
  • 5. அல்லாலம் உண்டமிடற் றாரமுதை அற்புதத்தைக்
    கல்லால நீழல்அமர் கற்பகத்தைச் - சொல்ஆர்ந்த
    விண்மணியை என்உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில்என்
    கண்மணியை நெஞ்சே கருது.
  • 6. கருதாயோ நெஞ்சே கதிகிடைக்க எங்கள்
    மருதா எழில்தில்லை மன்னா - எருதேறும்
    என்அருமைத் தெய்வதமே என்அருமைச் சற்குருவே
    என்அருமை அப்பாவே என்று.
  • 7. என்றும்உனக் காளாவேன் என்நெஞ்சே வன்நெஞ்சர்
    ஒன்றும் இடம் சென்றங் குழலாதே - நன்றுதரும்
    ஒற்றியப்பன் பொன்அடியை உன்னுகின்றோர் தம்பதத்தைப்
    பற்றிநிற்பை யாகில் பரிந்து.
  • 8. பரிந்துனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம்
    எரிந்துவிழ நாம்கதியில் ஏறத் - தெரிந்து
    விடையானை ஒற்றியூர் வித்தகனை மாதோர்
    புடையானை நெஞ்சமே போற்று.
  • 9. போற்றுதிஎன் நெஞ்சே புரம்நகையால் சுட்டவனை
    ஏற்றுகந்த பெம்மானை எம்மவனை - நீற்றொளிசேர்
    அவ்வண்ணத் தானை அணிபொழில்சூழ் ஒற்றியூர்ச்
    செவ்வண்ணத் தானைத் தெரிந்து.
  • 10. தெரிந்து நினக்கனந்தம் தெண்டன்இடு கின்றேன்
    விரிந்தநெஞ்சே ஒற்றியிடை மேவும் -பரிந்தநெற்றிக்
    கண்ணானை மாலயனும் காணப் படாதானை
    எண்ணாரை எண்ணாதே என்று.
  • 11. என்றென் றழுதாய் இலையேஎன் நெஞ்சமே
    ஒன்றென்று நின்ற உயர்வுடையான் - நன்றென்ற
    செம்மைத் தொழும்பர்தொழும் சீர்ஒற்றி யூர்அண்ணல்
    நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்.
  • 12. நாளாகு முன்எனது நன்நெஞ்சே ஒற்றியப்பன்
    தாளாகும் தாமரைப்பொன் தண்மலர்க்கே - ஆளாகும்
    தீர்த்தர் தமக்கடிமை செய்தவர்தம் சீர்ச்சமுகம்
    பார்த்துமகிழ் வாய்அதுவே பாங்கு.
  • 13. பாங்குடையார் மெய்யில் பலித்ததிரு நீறணியாத்
    தீங்குடையார் தீமனையில் செல்லாதே - ஓங்குடையாள்
    உற்றமர்ந்த பாகத்தெம் ஒற்றியப்பன் பொன்அருளைப்
    பெற்றமர்தி நெஞ்சே பெரிது.
  • 14. பெரியானை மாதர்ப் பிறைக்கண்ணி யானை
    அரியானை அங்கணனை ஆர்க்கும் - கரியானைத்
    தோலானைச் சீர்ஒற்றிச் சுண்ணவெண் நீற்றானை
    மேலானை நெஞ்சே விரும்பு.
  • 15. விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள்
    அரும்பித் தளைந்துள் அயர்ந்தே - திரும்பிவிழி
    நீர்கொண்டும் காணாத நித்தன்ஒற்றி யூரன்அடிச்
    சீர்கொண்டு நெஞ்சே திகழ்.
  • 16. திகழ்கின்ற ஞானச் செழுஞ்சுடரை வானோர்
    புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் - நிகழ்கின்ற
    ஒற்றிக் கனியை உலகுடைய நாயகத்தை
    வெற்றித் துணையைநெஞ்சே வேண்டு.
  • 17. வேண்டாமை வேண்டுவது மேவாத் தவமுடையோர்
    தீண்டாமை யாததுநீ தீண்டாதே - ஈண்டாமை
    ஒன்றுவபோல் நெஞ்சேநீ ஒன்றிஒற்றி யூரன்பால்
    சென்றுதொழு கண்டாய் தினம்.
  • 18. தினந்தோறும் உள்ளுருகிச் சீர்பாடும் அன்பர்
    மனந்தோறும் ஓங்கும் மணியை - இனந்தோறும்
    வேதமலர் கின்ற வியன்பொழில்சூழ் ஒற்றிநகர்ப்
    போத மலரைநெஞ்சே போற்று.
  • 19. போற்றார் புரம்பொடித்த புண்ணியனை விண்ணவர்கள்
    ஆற்றாத நஞ்சமுண்ட ஆண்தகையைக் - கூற்றாவி
    கொள்ளும் கழற்கால் குருமணியை ஒற்றியிடம்
    கொள்ளும் பொருளைநெஞ்சே கூறு.
  • 20. கூறுமையாட் கீந்தருளும் கோமானைச் செஞ்சடையில்
    ஆறுமலர்க் கொன்றை அணிவோனைத் - தேறுமனம்
    உள்ளவர்கட் குள்ளபடி உள்ளவனை ஒற்றிஅமர்
    நள்ளவனை நெஞ்சமே நாடு.
  • 21. நாடும் சிவாய நமஎன்று நாடுகின்றோர்
    கூடும் தவநெறியில் கூடியே - நீடும்அன்பர்
    சித்தமனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர்
    உத்தமனை நெஞ்சமே ஓது.
  • 22. ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது
    தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி
    ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப்
    பாதம் பிடிக்கும் பயன்.
  • 23. பயன்அறியாய் நெஞ்சே பவஞ்சார்தி மாலோ
    டயன்அறியாச் சீருடைய அம்மான் - நயனறியார்
    உள்ளத் தடையான் உயர்ஒற்றி யூரவன்வாழ்
    உள்ளத் தவரை உறும்.
  • 24. தவராயி னும்தேவர் தாமாயி னும்மற்
    றெவரா யினும்நமக்கிங் கென்னாம் - கவராத
    நிந்தை அகன்றிடஎன் நெஞ்சமே ஒற்றியில்வாழ்
    எந்தை அடிவணங்கா ரேல்.
  • 25. ஏலக் குழலார் இடைக்கீழ்ப் படுங்கொடிய
    ஞாலக் கிடங்கரினை நம்பாதே - நீல
    மணிகண்டா என்றுவந்து வாழ்த்திநெஞ்சே நாளும்
    பணிகண்டாய் அன்னோன் பதம்.
  • 26. பதந்தருவான் செல்வப் பயன்தருவான் மன்னும்
    சதந்தருவான் யாவும் தருவான் - இதம்தரும்என்
    நெஞ்சம்என்கொல் வாடுகின்றாய் நின்மலா நின்அடியே
    தஞ்சமென்றால் ஒற்றியப்பன் தான்.

நெஞ்சுறுத்த திருநேரிசை // நெஞ்சுறுத்த திருநேரிசை

No audios found!