திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இன்னந் தயவு வரவிலையா
iṉṉan tayavu varavilaiyā
நற்றாய் கவன்றது
naṟṟāy kavaṉṟatu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

109. வினா உத்தரம்
viṉā uttaram

    கொச்சகக் கலிப்பா
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
    ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
    மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
    நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே.
  • தாழிசை
  • 2. அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங்
    கனுபவ மாகின்ற தென்னடி தாயே
    தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
    திருநட இன்பம்என் றறியாயோ மகளே.
  • 3. அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங்
    கனுபவ மாகின்ற தென்னடி தாயே
    செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
    திருவருள் உருவம்என் றறியாயோ மகளே.

வினா விடை // வினா உத்தரம்