திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
தனித் திருஅலங்கல்
taṉit tirualaṅkal
மெய்யருள் வியப்பு
meyyaruḷ viyappu
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

111. நெஞ்சொடு கிளத்தல்
neñsoṭu kiḷattal

    கலித்தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே
    தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே
    தொடங்குநாள் நல்லதன் றோ.
  • 2. வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே
    நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே
    நல்லநாள் எண்ணிய நாள்.
  • 3. காலங் கடந்த கடவுளைக் காணற்குக்
    காலங் கருதுவ தேன் - நெஞ்சே
    காலங் கருதுவ தேன்.
  • 4. ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்
    காலங் கருதுவ தேன் - நெஞ்சே
    காலங் கருதுவ தேன்.
  • 5. தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
    தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே
    தடையாதும் இல்லைகண் டாய்.
  • 6. கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்
    பையுள்292 உனக்கென்னை யோ - நெஞ்சே
    பையுள் உனக்கென்னை யோ.
  • 7. என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
    உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
    உன்னுவ தென்னைகண் டாய்.
  • 8. நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே
    ஏன்பற்று வாயென்ப தார் - நெஞ்சே
    ஏன்பற்று வாயென்ப தார்.
  • 9. தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்
    தத்துவ முன்னுவ தேன் - நெஞ்சே
    தத்துவ முன்னுவ தேன்.
  • 10. ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்
    விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே
    விக்கல் வராதுகண் டாய்.

    • 291. காணவே - பி. இரா., பதிப்பு.

நெஞ்சொடு நேர்தல் // நெஞ்சொடு கிளத்தல்