திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
அம்பலத்தரசே
ampalattarasē
சூதுமன்னு மிந்தையே
sūtumaṉṉu mintaiyē
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

135. போகம் சுகபோகம்
pōkam sukapōkam

    சிந்து
    திருச்சிற்றம்பலம்
  • 1. போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம்
    ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்.
  • 2. நலமங்கலம் உறும்அம்பல நடனம்அது நடனம்
    பலநன்கருள் சிவசங்கர படனம்அது படனம்.
  • 3. சூதுமன்னும் இந்தையே சூடல்என்ன விந்தையே
    கோதுவிண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே.
  • 4. அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே
    இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே.
  • 5. ஞானசித்தி புரத்தனே நாதசத்தி பரத்தனே
    வானம்ஒத்த தரத்தனே வாதவித்தை வரத்தனே.
  • 6. நீஎன்னப்பன் அல்லவா நினக்கும்இன்னஞ் சொல்லவா
    தாயின்மிக்க நல்லவா சர்வசித்தி வல்லவா.
  • 7. பலத்தில்தன்னம் பலத்தில்பொன்னம் பலத்தில்துன்னும் நலத்தனே
    பலத்தில்பன்னும் பரத்தில்துன்னும் பரத்தில்மன்னும் குலத்தனே.
  • 8. ஆயவாய நேயஞேய மாயஞாய வாதியே
    தூயவாய காயதேய தோயமேய ஜோதியே.
  • 9. ஆதவாத வேதகீத வாதவாத வாதியே
    சூதவாத பாதநாத சூதஜாத ஜோதியே.
  • 10. அங்கசங்க மங்கைபங்க ஆதிஆதி ஆதியே
    துங்கபுங்க அங்கலிங்க ஜோதிஜோதி ஜோதியே.
  • 11. அத்தமுத்த அத்தமுத்த ஆதிஆதி ஆதியே
    சுத்தசித்த சப்தநிர்த்த ஜோதிஜோதி ஜோதியே.
  • 12. அஞ்சல்அஞ்சல் என்றுவந்தென் நெஞ்சமர்ந்த குழகனே
    வஞ்சநஞ்சம் உண்டகண்ட மன்றுள்நின்ற அழகனே.
  • 13. தொண்டர்கண்டு கண்டுமொண்டு கொண்டுள்உண்ட இன்பனே
    அண்டர்அண்டம் உண்டவிண்டு தொண்டுமண்டும் அன்பனே.
  • 14. கந்ததொந்த பந்தசிந்து சிந்தவந்த காலமே
    எந்தஎந்த சந்தமுந்து மந்தவந்த கோலமே.
  • 15. என்றும்என்றின் ஒன்றுமன்றுள் நன்றுநின்ற ஈசனே
    ஒன்றும்ஒன்றும் ஒன்றும்ஒன்றும் ஒன்றதென்ற தேசனே.
  • 16. எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட கீர்த்தியே
    அட்டவட்டம் நட்டமிட்ட சிட்டவட்ட மூர்த்தியே.
  • 17. சேர்இகார சாரவார சீர்அகார ஊரனே
    ஓர்உகார தேரதீர வாரவார தூரனே.
  • 18. வெய்யநொய்ய நையநைய மெய்புகன்ற துய்யனே
    ஐயர்ஐய நையும்வையம் உய்யநின்ற ஐயனே.
  • 19. பாசநாச பாபநாச பாததேச ஈசனே
    வாசவாச தாசர்நேச வாசகாச பேசனே.
  • 20. உரியதுரிய பெரியவெளியில் ஒளியில்ஒளிசெய் நடனனே
    பிரியஅரிய பிரியமுடைய பெரியர்இதய படனனே.
  • 21. அகிலபுவன உயிர்கள்தழைய அபயம்உதவும் அமலனே
    அயனும்அரியும் அரனும்மகிழ அருளும்நடன விமலனே.
  • 22. அகரஉகர மகரவகர அமுதசிகர சரணமே
    அபரசபர அமனசமன அமலநிமல சரணமே.
  • 23. தகரககன நடனகடன சகளவகள சரணமே
    சகுணநிகுண சகமநிகம சகிதவிகித சரணமே.
  • 24. அனகவனஜ அமிதஅமிர்த அகலஅகில சரணமே
    அதுலவனத அசுதவசல அநிலவனல சரணமே.
  • 25. தனககனக சபையஅபய சரதவரத சரணமே
    சதுரசதர சகசசரித தருணசரண சரணமே.
  • 26. உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே
    உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே.
  • 27. இளகும்இதய கமலம்அதனை இறைகொள்இறைவ சரணமே
    இருமைஒருமை நலமும்அருளும் இனியசமுக சரணமே.
  • 28. அடியும்நடுவும் முடியும்அறிய அரியபெரிய சரணமே
    அடியர்இதய வெளியில்நடனம் அதுசெய்அதிப சரணமே.
  • 29. ஒடிவில்கருணை அமுதம்உதவும் உபலவடிவ சரணமே
    உலகமுழுதும் உறையநிறையும் உபயசரண சரணமே.
  • 30. அறிவுள்அறியும் அறிவைஅறிய அருளும்நிமல சரணமே
    அவசம்உறுமெய் யடியர்இதயம் அமரும்அமல சரணமே.
  • 31. எறிவில்உலகில்342 உயிரைஉடலில் இணைசெய்இறைவ சரணமே
    எனையும்ஒருவன் எனவுள்உணரும் எனதுதலைவ சரணமே.
  • 32. நினையும்நினைவு கனியஇனிய நிறைவுதருக சரணமே
    நினையும்எனையும் ஒருமைபுரியும் நெறியில்நிறுவு சரணமே.
  • 33. வனையுமதுர அமுதஉணவு மலியஉதவு சரணமே
    மருவுசபையில் நடனவரத வருகவருக சரணமே.
  • 34. நினைக்கில்நெஞ்சம் இனிக்கும்என்ற நிருத்தமன்றில் ஒருத்தனே
    நினைக்கும்அன்பர் நிலைக்கநின்று பொருத்துகின்ற கருத்தனே.
  • 35. மயங்கிநெஞ்சு கலங்கிநின்று மலங்கினேனை ஆண்டவா
    வயங்கிநின்று துலங்குமன்றில் இலங்குஞான தாண்டவா.
  • 36. களங்கவாத களங்கொள்சூதர் உளங்கொளாத பாதனே
    களங்கிலாத உளங்கொள்வாருள் விளங்குஞான நாதனே.
  • 37. தடுத்தமலத்தைக் கெடுத்துநலத்தைக் கொடுத்தகருணைத் தந்தையே
    தனித்தநிலத்தில் இனித்தகுலத்தில் குனித்தஅடிகொள் எந்தையே.
  • 38. எச்சநீட்டி விச்சைகாட்டி இச்சைஊட்டும் இன்பனே
    அச்சம்ஓட்டி அச்சுநாட்டி வைச்சுள்ஆட்டும் அன்பனே.
  • 39. சபாசிவா மஹாசிவா சகாசிவா சிகாசிவா
    சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா.
  • 40. வாசிவா சதாசிவா மஹாசிவா தயாசிவா
    வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா.

    • 342. இருமைஉலகில் - முதற்பதிப்பு. பொ. சு. பதிப்பு.

சிவபோகம் // போகம் சுகபோகம்