திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
பசியாத அமுதே
pasiyāta amutē
வேத சிகாமணியே
vēta sikāmaṇiyē
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai

144. நீடிய வேதம்
nīṭiya vētam

    கலிவிருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. நீடிய வேதம் தேடிய பாதம்
    நேடிய கீதம் பாடிய பாதம்
    ஆடிய போதம் கூடிய பாதம்
    ஆடிய பாதம் ஆடிய பாதம்.
  • 2. சாக்கிய வேதம் தேக்கிய பாதம்
    தாக்கிய ஏதம் போக்கிய பாதம்
    சோக்கிய வாதம் ஆக்கிய பாதம்
    தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.
  • 3. ஏன்றிய சூதம் தோன்றிய பாதம்
    ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம்
    ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம்
    ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.
  • 4. சஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்
    தஞ்சித மாகும் சஞ்சித பாதம்
    கொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்
    குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.
  • 5. எண்ணிய நானே திண்ணியன் ஆனேன்
    எண்ணிய வாறே நண்ணிய பேறே
    புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்
    புண்ணிய வானே புண்ணிய வானே.
  • 6. தொத்திய சீரே பொத்திய பேரே
    துத்திய பாவே பத்திய நாவே
    சத்தியம் நானே நித்தியன் ஆனேன்
    சத்திய வானே சத்திய வானே.
  • 7. எம்புலப் பகையே எம்புலத் துறவே
    எம்குலத் தவமே எம்குலச் சிவமே
    அம்பினில் கனலே அந்தணர்க் கிறையே
    அம்பலத் தரசே அம்பலத் தரசே.
  • 8. இன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே
    எண்குணச் சுடரே இந்தகத் தொளியே
    அன்புடைக் குருவே அம்புயற் கிறையே
    அம்பலத் தமுதே அம்பலத் தமுதே.

அம்பலத்தமுதே // நீடிய வேதம்