திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நற்றுணை விளக்கம்
naṟṟuṇai viḷakkam
சிவபுண்ணியத் தேற்றம்
sivapuṇṇiyat tēṟṟam
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

006. திருவருள் வழக்க விளக்கம்
tiruvaruḷ vaḻakka viḷakkam

    திருவொற்றியூர்
    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. தோடுடை யார்புலித் தோலுடை யார்கடல் தூங்கும்ஒரு
    மாடுடை யார்மழு மான்உடை யார்பிர மன்தலையாம்
    ஓடுடை யார்ஒற்றி யூர்உடை யார்புகழ் ஓங்கியவெண்
    காடுடை யார்நெற்றிக் கண்உடை யார்எம் கடவுளரே.
  • 2. வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
    திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
    உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
    கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே.
  • 3. செல்இடிக் கும்குரல் கார்மத வேழச் சினஉரியார்
    வல்அடுக் கும்கொங்கை மாதொரு பாகர் வடப்பொன்வெற்பாம்
    வில்எடுக் கும்கையர் சாக்கியர் அன்று விரைந்தெறிந்த
    கல்லடிக் கும்கதி காட்டினர் காண்எம் கடவுளரே.
  • 4. ஏழியல் பண்பெற் றமுதோ டளாவி இலங்குதமிழ்க்
    கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்தநற்சீர்
    வீழியில் தம்பதிக் கேவிடை கேட்கவெற் பாள்உடனே
    காழியில் தன்னுருக் காட்டின ரால்எம் கடவுளரே.
  • 5. நாட்டில் புகழ்பெற்ற நாவுக் கரசர்முன் நாள்பதிகப்
    பாட்டிற் கிரக்கம்இல் லீர்எம் பிரான்எனப் பாடஅன்றே
    ஆட்டிற் கிசைந்த மலர்வாழ்த்தி வேதம் அமைத்தமறைக்
    காட்டில் கதவம் திறந்தன ரால்எம் கடவுளரே.
  • 6. பைச்சூர் அரவப் படநடத் தான்அயன் பற்பலநாள்
    எய்ச்சூர் தவஞ்செய் யினும்கிடை யாப்பதம் ஏய்ந்துமண்மேல்
    வைச்சூரன் வன்தொண்டன் சுந்தரன் என்னுநம் வள்ளலுக்குக்
    கச்சூரில் சோறிரந் தூட்டின ரால்எம் கடவுளரே.
  • 7. ஏணப் பரிசெஞ் சடைமுத லானஎல் லாம்மறைத்துச்
    சேணப் பரிகள் நடத்திடு கின்றநல் சேவகன்போல்
    மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்க வாசகர்க்காய்க்
    காணப் பரிமிசை வந்தன ரால்எம் கடவுளரே.
  • 8. எல்லாம் செயவல்ல சித்தரின் மேவி எழில்மதுரை
    வல்லாரின் வல்லவர் என்றறி யாமுடி மன்னன்முன்னே
    பல்லா யிரஅண்ட மும்பயம் எய்தப் பராக்கிரமித்துக்
    கல்லானை தின்னக் கரும்பளித் தார்எம் கடவுளரே.
  • 9. மால்எடுத் தோங்கிய மால்அயன் ஆதிய வானவரும்
    ஆல்அடுத் தோங்கிய அந்தண னேஎன் றடைந்திரண்டு
    பால்எடுத் தேத்தநம் பார்ப்பதி காணப் பகர்செய்மன்றில்
    கால்எடுத் தாடும் கருத்தர்கண் டீர்எம் கடவுளரே.
  • 10. மாற்பதம் சென்றபின் இந்திரர் நான்முகர் வாமனர்மான்
    மேற்பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல்மற்றுள்ளோர்
    ஆற்பதம் கொண்டபல் ஆயிரம் கோடிஅண் டங்கள்எல்லாம்
    காற்பதம் ஒன்றில் ஒடுக்கிநிற் பார்எம் கடவுளரே.

    • 17. இரக்கமில்லீர் எம்பிரான் என நாவுக்கரசர் பாடியதாவதுஅரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரேசுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோசரக்க விக்கத வந்திறப் பிம்மினே.

திருவருள் வழக்க விளக்கம் // திருவருள் வழக்க விளக்கம்