திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
நடேசர் கொம்மி
naṭēsar kommi
நடேசர் கீர்த்தனை
naṭēsar kīrttaṉai
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

106. சிலதா ஸம்வாதம்
silatā shamvātam

    தாழிசை
    திருச்சிற்றம்பலம்
  • 1. தண்மதி யொண்முகப் பெண்மணி யே - உன்னைத்
    தான்கொண்ட நாயக ராரே டி
    அண்மையிற் பொன்னணி யம்பலத் தாடல்செய்
    ஐய ரமுத ரழக ரடி.
  • 2. செங்கயற் கண்மட மங்கைநல் லாய் - உன்றன்
    செங்கை பிடித்தவ ராரே டி
    அங்கய லாரன்று பொன்னம்ப லத்தெங்கள்
    ஆனந்தத் தாண்டவ ராஜ னடி.
  • 3. கன்னற் சுவைமொழி மின்னிடை யாய் - உன்னைக்
    கன்னி யழித்தவ ராரே டி
    உன்னற் கரியபொன் னம்பலத் தாடல்செய்
    உத்தம ரானந்த சித்த ரடி.
  • 4. தீமையி லாதபெண் மாமயி லே - உன்னைச்
    சேர்ந்து கலந்தவ ராரே டி
    தாமமு டிக்கணிந் தம்பலத் தேயின்பத்
    தாண்டவஞ் செய்யுஞ் சதுர ரடி.
  • 5. அன்னந டைப்பெண்க ளாரமு தே - உன்னை
    அன்பிற் புணர்ந்தவ ராரே டி
    துன்ன லுடையின ரம்பலத் தேநின்ற
    தூய திருநட ராய ரடி.
  • 6. காரள கப்பெண் சிகாமணி யே - உன்றன்
    கற்பை யழித்தவ ராரே டி
    பேரள வைக்கடந் தம்பலத் தேநின்ற
    பித்தர் பரானந்த நித்த ரடி.

தோழியர் உரையாடல் // சிலதா ஸம்வாதம்